வடமத்திய மாகாணசபைத் தேர்தல் பாதுகாப்புக் கடமைகளுக்காக 8000 படைவீரர்கள்
Read Time:1 Minute, 27 Second
வடமத்திய மாகாணசபைத்தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக 8000 படைவீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன தேர்தல் நடைபெறும் காலத்தில் மேலும் பாதுகாப்புப்படைவீரர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிபொலிஸ் மா அதிபர் ஜே.ஜீ.ஜீ பத்திரன தெரிவித்துள்ளார் தேர்தல் காலத்தில் விஷேட ரோந்து நடவடிக்கைகளும் விஷேட பாதுகாப்புச் சோதனை சாவடிகளும் அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதுவரையிலும் தேர்தல் தொடர்பாக 17வன்முறைச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகப் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார் இதேவேளை பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை அகற்றும் பணிகள் சப்பிரகமுவ மாகாணத்தில் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் உபாலி ஹேவகே தெரிவித்துள்ளார்.
Average Rating