கொக்குவிலில் கிளைமோர்த் தாக்குதல்: 2 இராணுவத்தினர் காயம்- பொதுமகன் பலி
Read Time:1 Minute, 0 Second
யாழ். கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் இருவர் படுகாயமடைந்தனர். பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டார்.
கொக்குவிலிலிருந்து ஆனைக்கோட்டை நோக்கி, நேற்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் சென்று கொண்டிருந்த இராணுவத்தினரின் சுற்றுக்காவல் அணியை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
காயமடைந்த இராணுவத்தினர் பலாலி இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சம்பவத்தையடுத்து இராணுவத்தினர் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை நடத்தியதாக யாழ். தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.