ஐ.நா. விஷேடபிரதிநிதிகளும் அரசசார்பற்ற நிறுவனங்களுமே இலங்கைக்கு எதிரான அறிக்கைகளை வழங்கியுள்ளன -சிங்கள ஊடகம் தெரிவிப்பு
ஐக்கிய நாடுகளின் விஷேட பிரதிநிதிகளும் சில சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களும் இலங்கைக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய தகவல்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளும் அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த நபர்களும் இலங்கைக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலான தகவல்களை வழங்கியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கைகளின் காரணமாகவே இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஆணைக்குழுவினால் இலங்கை தொடர்பான நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு பல அரசசார்பற்ற நிறுவனங்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள 41பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையில் பாதுகாப்பு படையினரும் காவல்துறையினரும் மனித உரிமைகளை மீறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறுது.
Average Rating