குருநாகல் ஆங்கில ஆசிரியர் கொலை தொடர்பாக ஆசிரியை கைது

Read Time:1 Minute, 34 Second

குருநாகல் பகுதியில் ஆங்கில ஆசிரியர் ஒருவரின் கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் அதே பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியை பாதாள குழுவொன்றின் தலைவரிடம் இக்கொலையைப் புரிவதற்கு ஒப்பந்தம்செய்து கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென பொலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவின் தலைவரின் தகவலுக்கமைய பொலீசார் நேற்று இந்த ஆசிரியையைக் கைதுசெய்துள்ளனர். இந்த ஆசிரியை பிரதேச வர்த்தகர் ஒருவரைக் கொலைசெய்வதற்கு இந்தப் பாதாள உலககுழுத் தலைவருக்கு ஒப்பந்தமொன்றை வழங்கியுள்ளதாகவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. இந்த ஆங்கில ஆசிரியரும், வர்த்தகரும் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கொலைசெய்யப்பட்டிருந்தனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான ஆசிரியை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலேசியாவில் 6 இலங்கையர்கள், ஐ.நா. உயர்ஸ்தானிகரை சந்திக்க அனுமதிக்குமாறு கோரி 7நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம்
Next post முக்கிய பௌத்த பிக்குகள் சிலர் சரத்பொன்சேகாவுடன் விஷேட பேச்சு