மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்திய வீரர்கள் நெருக்கடியில்..
தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவை கௌரவிக்கும் நோக்குடன் மண்டேலாவுக்கு நன்றி தெரிவிக்கும் வாசகம் எழுதப்பட்ட அங்கியை கால்பந்தாட்ட iதானத்தில் வெளிப்படுத்திய ஐவரி கோஸ்ட் கால்பந்தாட்ட வீரர்கள் இருவர் விசாரணையை எதிர்நோக்கியுள்ளனர்.
துருக்கியின் பிரபல கழகமான கலாட்டாசரேவில் விளையாடும் டீடியர் ட்ரகோபா மற்றும் இமானுவெல் எபோ ஆகியோர் ஆகியோர் கடந்த வார இறுதியில் நடைபெற்ற எலாஸிக்போர் கழகத்துடனான போட்டியின் முடிவில் தமது மேலங்கியை கழற்றி, ‘தேங்க் யூ மடிபா’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ரீ ஷேர்ட்டை காண்பித்தனர்.
இதையடுத்து இவ்விரு வீரர்களையும் ஒழுக்காற்று விசாரணையை எதிர்கொள்ள வேண்டுமென துருக்கி கால்பந்தாட்டச் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
கால்பந்தாட்ட மைதானத்தில் அரசியல் சுலோகங்கள் கொண்ட ஆடையை அணிவது தடைசெய்யப்பட்டுள்ளது என அச்சம்மேளனம் சுட்டிக் காட்டியுள்ளது.
டீடியர் ட்ரகோபா மற்றும் இமானுவெல் எபோ இருவரும் ஐவரி கோஸ்ட் தேசிய வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating