24 மணிநேர விபத்துகளில் ஒருவர் பலி; 279 பேர் வைத்தியசாலையில் அனுமதி
கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற விபத்துகளில் ஒருவர் பலியானதுடன் 279 கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துச்சேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 12 மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 220 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி தொடக்கம் இன்று புதன்கிழமை காலை 6 மணி வரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுபோதையில் பஸ் செலுத்திய ஒருவர், மோட்டார் சைக்கிள் செலுத்திய 111 பேர், முச்சக்கர வண்டி செலுத்திய 75 பேர், வேறு வாகனங்கள் செலுத்திய 33 பேர் என மொத்தமாக 220 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாணத்திலேயே கூடுதலாக 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
Average Rating