திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு: வாலிபர் உள்பட 2 பேர் கைது!!
பழைய வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி நகரை சேர்ந்தவர் கவிதா (வயது 16 பெயர் மாற்றப்பட்டுள்ளது.) இவர் சவுகார் பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 8–ந் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து பழைய வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்போது கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் கவிதா இருப்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு சென்று கவிதாவை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பழைய வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி நகரை சேர்ந்த முருகன் (23) என்பவர் கவிதாவை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று கற்பழித்தது தெரியவந்தது. மேலும் இதற்கு உடந்தையாக முருகனின் தந்தை மாசி (50) உறவினர் மதன் இருந்து உள்ளார் என்பதும் தெரியவந்தது.
முருகன், மாசியை கைது செய்தனர். தப்பி ஓடிய மதனை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Average Rating