சவுதி அரேபியாவில் போதை பொருள் கடத்திய பாகிஸ்தானியர் தலைதுண்டிப்பு!!
Read Time:1 Minute, 16 Second
சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. அங்கு போதை பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த இஸ்மாயில் கான் சயீத் என்பவர் ஹெராயின் போதை பொருளை சவுதி அரேபியாவுக்கு கடத்தி வந்தார். அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த கோர்ட்டு அவரது தலையை துண்டிக்க உத்தரவிட்டது. அதை தொடர்ந்து நேற்று அவருக்கு தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டது.
போதை பொருள் கடத்திய குற்றத்துக்காக கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து இதுவரை 12 பாகிஸ்தானியர் தலை துண்டிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் சவுதி அரேபியாவில் தான் மரண தண்டனைகள் அதிக அளவில் நிறைவேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
Average Rating