கோவா கடற்கரையில் அரை நிர்வாண நிலையில் இளம்பெண்ணின் பிணம்: கற்பழித்துக் கொலையா…?

Read Time:1 Minute, 30 Second

c5933a6b-0184-48b2-8287-794ced2bb477_S_secvpfஇந்தியாவின் உல்லாச நகரமான கோவா நகரின் வடக்குப் பகுதியில் உள்ள அரம்போல் கடற்கரையில் அரை நிர்வாண நிலையில் கிடந்த இளம்பெண்ணின் பிரேதத்தை கைப்பற்றியுள்ள போலீசார், அவர் கற்பழித்துக் கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

பிணமாக கிடக்கும் சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்தப்பெண் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ள கோவா போலீசார், இதே பெண்ணை கடந்த வியாழக்கிழமை இரவு மூன்று வாலிபர்களுடன் உள்ளூர்வாசிகள் பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இறந்துகிடக்கும் இந்தப் பெண் கற்பழித்துக் கொல்லப்பட்டாரா? அல்லது, மிதமிஞ்சிய போதையில் கடலில் குளிக்கச்சென்று தண்ணீரில் மூழ்கி அவர் பலியானரா? என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே தெளிவாகும் என கருதும் போலீசார், இருநாட்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணுடன் சுற்றித்திரிந்த மூன்று வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேப்பந்தட்டை அருகே வீட்டுக்கு வந்த பார்சலில் இருந்த வெடிகுண்டு வெடித்து மூதாட்டி சாவு…!!
Next post விருதுநகர் அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற இளம்பெண்…!!