ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி…!!
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலில் உள்ள ராணுவ அமைச்சக கட்டிடம் மற்றும் குனார் மாகாண கவர்னர் மாளிகை அருகே தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் முப்பதுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
காபுலில் நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள தலிபான் தீவிரவாத இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித், இச்சம்பவத்தில் 23 அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் 30 பேர் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குனார் மாகாண தலைநகரான ஆசாதாபாத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் சுமார் 20 பேர் உயிரிழந்ததாக மாகாண கவர்னர் வஹிதுல்லா கலிம்சாய் கூறியுள்ளார். இவ்விரு தாக்குதல்களிலும் காயமடைந்த நூற்றுக்கும் அதிகமானவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Average Rating