படகுகளில் வந்த பொதுமக்களை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்
Read Time:52 Second
வடகிழக்கின் கரையோரப் பகுதியில் 92 படகுகளில் சென்ற 1,500 பொதுமக்களை இலங்கைக் கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். 80 படகுகள் பருத்தித்துறை துறைமுகத்திற்குச் செல்வதற்கும், 12 படகுகள் புல்மோட்டைக்கு செல்வதற்கும் கடற்படையினர் வழித்துணை வழங்கியதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு வலயத்திலிருந்து திங்கட்கிழமை அதிகாலை சிறிய படகுகள் மூலம் வெளியேறி வந்த பொதுமக்களை கடற்படையினர் கண்டுபிடித்துக் காப்பாற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டது.
Average Rating