சரணடைந்த பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர்!!! (படங்கள் இணைப்பு –கவனம்.. கோரமானவை!!!)

Read Time:8 Minute, 11 Second

ltte-tc-prabaharan_05பெரும்பான்மையான தமிழ் மக்கள் தம் தலைவனாக நம்பிய ஒருவனின் உடலை அவமானப்படுத்துவது கூட, தமிழ் இனத்தையே அவமானப்படுத்துவது தான். இந்த நிலையில் அவனைக் கொன்று குதறிய விதம், தமிழினத்தின் மேலான ஒரு குற்றமாகும். புலிகள் மேலான எந்த குற்றச்சாட்டையும், ஒரு நாட்டின் சட்டத்தின் எல்லைக்குள் விசாரணை செய்யமுடியும்;. இதன் மூலம் தண்டிக்கவும் முடியும். இதற்கு சட்டங்கள் வைத்திருக்கின்றவர்கள் தான், சட்டவிரோதமாக தம் பாசிச வழியில், சரணடைந்த பிரபாரகரனை காட்டுமிராண்டித்தனமாக கொன்றனர். அவனின் உடலைக் கூட பலவிதமான இழிவுக்குள்ளாக்கி அவமானப்படுத்தினர். இவை எல்லாம் போர்க்குற்றங்கள் தான். இறந்த உடலை அவமானப்படுத்துவது கூட குற்றம் தான். யுத்தத்தில் இறந்த உடலை அவமானப்படுத்து, போர்க்குற்றம்.

அதுவும் இனத்துக்காக போராடிய தலைவன் ஒருவனை இப்படிச் செய்வது, இனவிரோதக் குற்றமாகும். இதை சர்வதேச சட்டங்கள் கூட வரையறுக்கின்றது. ஆனால் பேரினவாத பாசிச பயங்கரவாதமோ, இதை உலகறிய காட்சிப்படுத்துகின்றது. இதற்குள் சிங்களப் பேரினவாதம் தம் போர்க்குற்றங்களை உலகறியக் கூடாது என்பதற்காக, பிரபாகரன் எப்படி சாகடிக்கப்பட்டான் என்பதை மறைக்க தலைக்கு துணி போட்டனர். எப்படிப்பட்ட மரணம் என்பதை, குற்றத்தின் முழுத் தன்மையை எடுத்துக் காட்டும் வண்ணம் படத்தை இணைத்துள்ளோம். எப்படி பிரபாகரன் கொல்லப்பட்டான் என்பதை, இது எடுத்துக் காட்டுகின்றது.

அவர் மோதலில் சாகவில்லை என்பதையும், மூன்றாம் தரப்பிடம் சரணடைந்த பிரபாகரனை, மூன்றாம் தரப்பின் துணையுடன் எப்படி பேரினவாத பாசிட்டுகள் உயிருடன் சிதைத்தனர் என்பதை இந்தப் படம் எடுத்துக் காட்டுகின்றது. இங்கு இணைக்கப்பட்டுள்ள மற்றைய படங்கள், அரச பேரினவாதிகள் இறந்த உடலை அவமானப்படுத்தும் வக்கிரத்தை எடுத்துக் காட்டுகின்றது.

ஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம். இதே அவமானத்தைத்தான் பிரபாகரன் உடல் சந்திக்கின்றது. இறந்த உடலுக்கு கோமணம் கட்டி மகிழ்கின்ற பேரினவாத அதிகார வர்க்கம், தமிழனுக்கு கோமணம் கட்டிய வக்கிரத்துடன் அனைத்தும் நடந்தேறியுள்ளது.

பிரபாகரன் உடல் பலவிதமாக சிதைக்கப்படுகின்றது. முதலில் அரசு காட்டிய படம், அடித்து வீங்கிச் சிதைந்து போன முகம் தான். இறந்த பெண்ணின் உடலை மேய்ந்த அதே வக்கிரம் தான் இங்கும். பிரபாகரன் உடல் மேல் வன்முறைகள், எதிர்காலத்தில் காட்சிகளாக கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

இங்கு குற்றங்கள் பல. பிரபாகரனின் வெறும் உடலுக்கு அப்பால், மூன்றாம் தரப்பிடம் நம்பி சரணடைந்த ஒருவனுக்கு நடந்த கதையிது. அவனை சித்திரவதை செய்து கொன்ற உண்மையை, இங்கு பளிச்சென்று இந்தப் படம் எடுத்துக் காட்டுகின்றது. போர்க் குற்றத்தின் முழுப் பரிமாணத்துடன், இது அரங்கேறியுள்ளது.

வெளிநாட்டு புலித்தலைமை தன் குற்றத்தை மறைக்க வீரமரணம் என்று ஒருபுறம் சொல்லியும், இல்லை உயிருடன் உள்ளார் என்று ஏனையோர் சொல்லியும், தன் தலைவன் மேலான இந்தக் குற்றத்துக்கு உடந்தையாக உள்ளனர். பிரபாகரனை சரணடைய வைக்க தாம் மூன்றாம் தரப்பு ஊடாக நடத்திய காட்டிக் கொடுப்பை மூடிமறைக்க இந்தப் போர்க்குற்றமே இவர்களால் மூடிமறைக்கப்படுகின்றது.

இந்த உடல் பிரபாகரனுடையதல்ல என்றதன் மூலம், பேரினவாதம் செய்த இழிவையும் இந்த படுகொலையையும் கூட மறுக்கின்றனர். உண்மையில் பிரபாகரனை மூன்றாம் தரப்பிடம் சரணடைய வைத்து, அதன் மூலம் தாங்கள் காட்டிக்கொடுத்த இந்தச் சதியை மூடிமறைக்கின்றனர்.

இதன் மூலம் தமிழன் தலைவனாக தமிழ்மக்களால் கருதப்பட்ட ஒருவன் மேல் நிகழ்ந்த போர்க்குற்றத்தின் தன்மையையே, இவர்கள் இல்லாததாக்குகின்றனர். இப்படி பேரினவாத அரசுக்கு அவர்கள் மேலும் துணை போகின்றனர். அரசின் குற்றத்துக்கு பின்னால், அதற்கு உடந்தையாகி நிற்கின்றனர்.

 

பெரும்பான்மைத் தமிழ்மக்களை அவமானப்படுத்திய பேரினவாத அசிங்கத்தை வெளிப்படுத்தாது, தம் குற்றத்தை மூடிமறைக்க காட்டிக் கொடுக்கப்படுகின்றது.

மறுபக்கத்தில் துரோகக் குழுக்கள், இந்த போர்க்குற்றத்தின் பின் இருந்துள்ளனர். பிரபாகரனை மோசடி மூலம் மூன்றாம் தரப்பிடம் சரணடைய வைத்துக் கொன்றவர்கள் தான், படத்தை பெருமையுடன் வெளியிட்டார்கள். வேறு யாருமல்ல இந்தியாவில் றோவின் கூலிப்படையாக இருக்கும் ஈ.என்.டி.எல்.எவ் இணையம் இந்தப் படத்தை வெளியிட்டவுடனேயே, சிறிது நேரத்தில் அதை அகற்றியிருந்தனர். குற்றவாளிகள் தம் குற்றத்தை முழுமையாக மறைக்க எடுத்த எச்சரிக்கை நடவடிக்கை, இந்தப் படத்தை அவர்களை உடனேயும் அகற்ற வைத்துள்ளது. இப்படி இந்த போர்க் குற்றத்தில் இந்திய, இலங்கை கூலிக்குழுக்களும் இணைந்தே பங்காற்றியுள்ளது. அரசுடன் இயங்கும் கருணா முன்னிலையில், மூன்றுவிதமான உடல் சார் காட்சிகளை நாம் காணமுடியும்.

இப்படி போர்க்குற்றத்தின் முழுப் பரிமாணத்தில், அனைத்து பாசிட்டுகளும் ஈடுபட்டுள்ளனர். புலம்பெயர் புலியெதிர்ப்பு ஜனநாயகவாதிகளின் துணையுடனேயே இந்தக் குற்றம் இன்று பாதுகாக்கப்படுகின்றது. இறந்த உடல் மேல் நடத்திய இழிவு, சரணடைந்த அவரைக் கொன்ற விதம், இந்த “ஜனநாயகத்துக்கு” ஏற்புடையதாக உள்ளது. இதுதான் அவர்கள் பேசும் ஜனநாயகம். இதுபோன்ற செயலை புலிகள் செய்தாலும் சரி, அரசு செய்;தாலும் சரி, அனைத்தும் மக்களுக்கு எதிரானவை தான்.

அந்தவகையில் நாம் மக்களுக்காக போராட வேண்டியுள்ளது. அனைத்து மக்கள் விரோதிகளையும், நாம் இனம் காணவேண்டிய காலமிது.

–பி.இரயாகரன் (நன்றி.. தமிழ்சேர்கில் இணையம்.. -சில தணிக்கைகளுடன்-)

lttepiraba-dead001mm1ltteprabahranbody-001ltteprabahranbody-002ltte-tc-prabaharan_02ltte-tc-prabaharan_03ltte-tc-prabaharan_04ltte-tc-prabaharan_06ltte-tc-prabaharan_05ltte-tc-prabaharan_07ltte-tc-prabaharan_08ltte-tc-prabaharan_09ltte-tc-prabaharan_10ltte-tc-prabaharan_11lttepiraba-deadbody

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

102 thoughts on “சரணடைந்த பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர்!!! (படங்கள் இணைப்பு –கவனம்.. கோரமானவை!!!)

  1. இங்கு விமர்சனம் செய்யும் புலி ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பது திரு.ஜோன் அவர்களின் கீழ்த்தரமான கேள்விகளிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.
    * நீ தமிழனா?
    * யார் உனது தந்தை?
    * உன் அப்பன் தமிழனா?
    * ஒரு அப்பனுக்குப் பிறந்தாயா?……… இப்படியான கீழ்த்தரமான எண்ணங்களில் எமது அடுத்த தலைமுறைத் தமிழினம் சீரழிந்து போகிறது. இன்றைய காலத்தின் தேவையை புலிகளும், வால்களும் அறிந்து செயற்படுவதாகத் தெரியவில்லை.

  2. nakkeran, aarya & etc. you must find your true father. becouse they will not be truth tamils. may be your father is a singales.

  3. it is easy to see this is the body of prabaharan.
    do you think any one in vanny or srilank in this big size?
    i think prabaharan was the wast stupid lead. he descrved for it.

  4. sasi,
    Can you help me in finding my father?
    Because you seems very good in identifying fathers hehehe….

    You guys only know this? nothing else? what a shame….

    John, first find your dad…. he must be a white..we can see that from ur name …..
    and also you guys try to find who is father for charles , thuwaraga and balachandran….
    it might me worthfull inverstigating that too…

  5. கரிகாலன் இன்னொன்றை விட்டு விட்டீர்கள்…

    – நீ சிங்களவனுக்கு பிறந்தாயா?

  6. கிளம்பிவிட்டாங்க ஐயா கிளம்பிவிட்டாங்க….
    இதை விட்டா வேற ஒண்டும் தெரியாதா இவங்களுக்கு…

    என்ன செய்வது… தமது தகப்பன் இறந்த செய்தியை கேட்ட வுடன், இவர்களுக்கு புத்தி பேதலித்து…. எல்லோரையும்.. யார் அப்பா யார் அப்பா ? எண்டு கேட்டுக்கொண்டு திரியுதுகள்….

    தம்பி. sasi… உமது அப்பா சில நேரம் ஆர்மியிடம் பிடிபடாமல் தப்பியிருப்பார்…அப்படி தான் நியூஸ் வருகிறது…. கவலைப்படாதே ராசா… என் ராசா….

  7. Karikalan i am not a supporter of LTTE…but think about 300000 tamils who r in those camps.Government should allow humanitarian agencies if they havenot nothng to
    hide.Lets find out both side atrocities…dont defend the Mahinda & Karuna & co.

  8. இதுவரை எந்த ஒரு செய்திக்கும் படத்துக்கும்

    கொடுக்காத முக்கியத்துவத்தை ஒரு வாரத்துக்கு

    மேல் பிரபாகரனின் கோரமான படங்களுக்கு

    கொடுத்ததின் மூலம் இந்த இணையத்தளத்தில்

    பணியாளர்கள் எவ்வளவு கொடூரமானவர்கள்

    என்பதை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து

    கொள்வார்கள், அதன் வெளி்ப்பாடே மட்டமான

    வார்த்தைப் பிரையோகங்கள். இந்தப் படங்களை

    நீண்டகாலத்துக்கு இந்த இணையத்தளத்தில் விடுவதன்

    மூலம் புலி ஆதரவாளர்௧ளிடையே குழப்பத்தை

    ஏற்படுத்தலாமென்று நினைத்தால் அதுவே உங்கள்

    முட்டாள்த்தனத்திற்கு சான்று ! உங்கள்

    வீரெமெல்லாம் செத்த பிணத்துடன் தான் என்பதை

    உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டீர்கள்
    .

    இதை கூறினால் ஏன் புலிகள் செய்யாததா? என்று

    அடுத்த பதில் எழுதுவார்கள். உங்களுக்கென்று சுய

    புத்தியோ சுயகுணமோ கிடையாதா??????

  9. உண்மையை மட்டும் பேசுங்கள் அது ஒன்றே நம் தலைவனுக்கு செய்யும் மரியாதை.
    தமிழ் துரோகிகள் ஏதாவது சொல்லுவதை நாம் கேட்டு தலைவனை அசிங்க படுத்த கூடாது
    இறந்தவர் மீது குற்றஞ் சாட்டுவது மிகவும் தவறாகும்.

  10. நீ ஒரு போதும் இலங்கையில் தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணமாட்டாய். தமிழ் மக்கள் அங்கே சமமாக நடத்த பட மாட்டார்கள்… எனவே தமிழ் ஈழம் மட்டுமே தீர்வு. உலக அளவில் விடுதலை புலிகளை தோற்கடிக்க உங்களால் முடியாது. .. ராஜபக்சே நீ செலவு பண்ண கணக்கு வேண்டம் அங்கு விலை மதிக்க முடியாத உயிர் கணக்கை சொல்????? உன் தலை கனம் இறங்கவில்லை எனில் இன்னும் இழக்க வேண்டியது நிறையா உள்ளது….. நல்ல செய்தி கொடுத்தீர்கள் அமைச்சர் அலி அவர்களே நன்றி,,,,,, புலி பதுங்குவது பயந்து அல்ல பாய்தான் நீ புலிகளை அழித்து விட்டதாக நினைத்து மார் தட்டி கொள்ளாதே அண்ணன் விரைவில் வருவர்ர் உன் கொட்டத்தை அடக்குவார் இலங்கை மண்ணில் தமிழனுக்கும் பாதி இடம் இருக்கு கடைசி தமிழன் இருக்கும் வரை புலிகள் இருப்பதாக நினைத்துக்கொள் நீ முழு வெற்றி பெறவில்லை அங்கு எந்த பிரதமரர் வந்தாலும் புலிகளை எதிர்த்து அழித்து வெற்றி காணமுடியாது …..
    தமிழர் தாகம் தமிழ் ஈழ தாயகம்…

  11. Nakkeeran genius lick mahinda & co boots …shame on you……Dont say ur a tamilan shame shame

  12. any one tell me why tails of Pulikal in
    uk germany swiss ect collect money from people . .

    TO ENJOY PIRABAHARAN IN THE SWIMMING POOL

  13. WHO IS THIS JAN JANANAYAGAM

    KEEP OF THANAM. . . THE CHIEF FUINDRISER . . UK

  14. yru nikal elam ?
    ukkaluku than manam onru erukka?
    eani ena saiyaporiyal?

  15. eman puthiila manithanuku cholli piriyosanam elli
    we no what is going to next?

  16. உங்கள் வீரெமெல்லாம் செத்த பிணத்துடன் தான் என்பதை முதலில் நீங்களே உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டினீர்கள்..

    ஆமி அடிச்சுக்கொண்டு வாரான், அவனுக்கு அடிப்பம் எண்டு இல்லை…செத்த மக்களின் படங்களால் இணையத்தளத்தை நிறைத்து அனுதாபம் தேடி நீங்கள் கோழைகள் எண்டு நீங்கள் எப்பவோ காட்டி விட்டீர்கள்.
    மாதக்கணக்கில் மக்கள் உடல்களை இணையத்தளத்தில் உலாவ விட்டு அழுதது யார்…
    கேவலம் பிஞ்சு குழந்தைகள் சாகும் பொது கூட வீடியோ எடுத்து தமக்கு அனுதாபம் தேடியது யார்?

    யாரும் புலி ஆதரவாளர்களை குழப்ப முடியாது.. அவர்கள் பள்ள புத்தி சாலிகள்…. உலகமே அழிந்தாலும்.. வீ வான்ட் தமிழ் ஈழம் அவர் லீடர் பிரபகாரன்…. அவர்கள் உலகம் அவ்வளவு தான்….

  17. md;Gld; jkpopd vjpHg;ghsHfSf;F (ef;fPud;> fhpfhyd; Nghd;wth;fSf;F) “re;jpiy rpe;J ghLk; cq;fisg;Nghd;w xUrpy ,dj;JNuhfpfshYk; $ypg;gilfshYk; jhd; jkpopdk; ,d;Dk; jiyFdpe;Jnfhz;bUf;fpwJ” “jkpoDf;F jkpoNd capuhk; me;jj; jkpoDf;F jkpoNd J}f;Ff; fapwhk;”

  18. அன்புடன் தமிழின எதிர்ப்பாளர்களுக்கு (நக்கீரன், கரிகாலன் போன்றவருக்கு) உங்களை போன்ற சந்திலை சிந்து பாடும் ஒருசில கோடரிக்கம்புகளால்தான் தமிழனுக்கு தலைவிதி இன்னும் மாறாமல் இருக்கு.

  19. well said sasi.Dont argue with these clowns…traitors worst than enemy..sinhalese better than these boot lickers.Gota will teach them a good lesson for these vidivelligal.

  20. para piraba can we ask Mrs.Karuna to contest the election (ur Keep) she will be a true leader of tamils?

  21. Ya John… you guys already learned a unfogetable lesson from GOTABAYA… Now, you are expect us to learn from him… ha…. ha…. ha…. What a funny!

    You guys still in DREAMS!
    come on… live in Reality!

  22. இந்தியத் தேர்தலுக்கு… ஜெயலலிதா உங்களுக்கு கனவுக் கன்னியா தெரிஞ்சா… தேர்தலில அவவை தமிழ்நாட்டுத் தமிழர்கள் கவுத்திட்டாங்க…
    இப்ப…
    உங்களுக்கு கருணாட மனிசி கேட்குதோ… போங்கடா போங்க… உங்களுக்கு இராணுவ பலமும் இல்லை, அரசியல் அறிவுமில்லை… மொத்தத்தில மூளையே இல்லை… பேசாமல் நடக்கிறதைப் பார்த்திட்டிருங்கோ… அதுதான் உங்களுக்குச் சரி!

    (இதைத்தானே பிரபா உயிரோடு இருக்கும்வரை செய்தீர்கள், வேற என்ன கிழிச்சியள்?)

  23. sasi & John why don,t you think ones what நக்கீரன், கரிகாலன் say

  24. Who ever it is this act must be condemned.
    As a member of Srilankan Muslim community, how ever the deep we have the wound caused by Mr.Prabaharan we forget it for an instant and pay our condolence for his end carried out by his opponents in a very very in human manner.

  25. அண்ணன் பிரபகாரன்… அண்ணி ஜெயலலிதா…. அப்படி கூட அழைத்து இருப்பார்கள்… ஹிஹி….
    இப்ப மத்தவன் யார் யாரை வைத்து இருக்கிறார்கள் எண்டு இவன் கணக்கு எடுக்கிறான். போல கிடக்கு…

    ஆமா… தமிழ் கூட்டமைப்பு மட்டும் மக்களின் முழு ஆதரவோடு தான் தெரிவு செய்யப்பட்டார்கள்… ஏனையா இப்படி முட்டாள்களாக இருக்கிறீர்கள்……

  26. ராஜபக்ஷே அவர்களே உங்கள் பக்கம் இருக்கும் நியாத்தை மட்டும் பேசுகிறிர்கள் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், இப்பொழுது நீங்கள் சொல்லும் அதே கருத்துகளை, உரிமையை தான் புலிகளும் கேட்டார்கள், அதை அப்பொழுதே பேசி தீர்த்து இருந்தால் போர்க்களம் தேவையா ? சர்வதேச போர் குற்ற தீர்ப்பாயத்தில் வழக்கு தொடருகிறார்கள் என்றதும் கோவபடுகிருருர்களே நியாமா? உங்கள் உயிர் மட்டும் தான் உயிரா? உங்கள் மேல் சர்வதேச போர் குற்ற தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தால் மட்டும் இறந்து போன உயிர்கள் திரும்ப கிடைக்குமா? உங்களின் சுயனலதிர்கக பல உயிர்களை தின்று அல்ல கொன்று திர்தீர்களே நியாமா? நீர் மனிதனா அல்லது அர்ரக்கனா? இதுவே உங்கள் மக்களுக்கு இது போல் நடத்து இருந்தால் சும்மா இருப்பிர்களா? இந்த வழக்கின் தீர்பில் ராஜபக்சே உனக்கு தூக்கு தண்டனை நிச்சியம்…. இன்னும் கொஞ்ச காலத்தில் நீயே உன் கழித்தில் மாட்டிஇருக்கும் துணியால் கழுத்தை இருக்கி கொள்வாய்,,,,.உன் குடும்பமே அழிந்து போகட்டும்.சிங்களன் மொக்கன் இதை வெடி கொளுத்தி கொண்டாடட்டும் . உன் முகத்திரை ஐநா முன் கிழிக்கப்படும் … தமிழ் மண்ணின் துரோகி உனக்கு தூக்குமேடையில் இடவேண்டும் ….. உலகத்தின் மனிதநேய ஆர்வலர்கள் இதனை ஆர்வமாய் நேர்மையாய் செயட்படுத்தனும். ஆனால் அமெரிக்கா ஒபமா இதை நடத்த முன்வருவாரா.? நிச்சியம்
    இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்….

  27. Hi every one . .

    Do you know Thanam . . The Chief Fundriser in UK. . .
    He already made lots of money for homself and his Friends . . . Thiruvarul Kannan (Saraswathybavans)
    Babu (Former Tamil Vision)
    Pulavar Sivanathan (Kaviyar)
    Now . . . in Jan Jananayagam – – MEP – FCUK

    Thanam try to transfer the money collected from people.
    Then had fight with Kamal . .
    The Chief of South West London . . .
    Then come for a negotiation to get half half . .
    Now they are shairing all the fund collected from uk tamils.

    As Thanam Having affairs With Jan Jananayagam . . .
    his wife gone seperated with her body guard . .

    Will continue soon . . .

  28. விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை பொறுத்தவரை நல்ல உடல் நலத்துடன் பத்திரமாக இருக்கிறார். இலங்கையில் மக்களோடு மக்களாக இருக்கிறார். விரைவில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அவர் அறிவிப்பார்.
    -nedumaaran.

    தமிழன் இவ்வளவு முட்டாள்களா?
    தலைவர் உயிரோடு இருக்கலாம்…. ஆனால் இலங்கையில் மக்களோடு மக்களாக இருக்கிறாராம்…..

    நெடுமாறன் காமடியில் விவேக் வடிவேலுவை மிஞ்சிவிட்டார்….

  29. Have you guys noticed so far any things? Up until now people’s throughts have been stangled and had guns at their head by LTTE and now every thing gone.

    People are back to normal and have healthy critics?

    emm……..isn’t it good?

  30. ஐயா நெடுமாறா… நீ மானஸ்தன் என்றால்…
    பிரபாகரன் உயிரோடு இல்லை என்று தெரிந்தால், தீக்குளிக்கத் தயாரா?
    அப்படி உன்னால் முடியாதென்றால்…
    அப்பாவித் தமிழர்களை ஏமாற்றுவதை விட்டுவிடு!

  31. is realy you are tamilans. prabakaran is still live. he is a sittan. he will fullfill all tha tmil’s heart.

  32. தமிழனுக்கு தனி நாடு கிடைக்கும் வரை ஓய மாட்டேன்..இந்தியா, இலங்கை, சீனா, பாகிஸ்தான், ஜப்பான், மலேசியா, இஸ்ரேல், போன்ற நாடுகள் வியூகம் அமைத்து முயற்ச்சி செய்தாலும் அவர்களால் புலிகளை ஒன்றும் செய்ய முடியாது… ராஜபக்க்ஷே நிம்மதியாக உறங்க முடியாது??? பிரபாகரன் ஒரு சிங்கம் அவரை அந்த சிங்களனால் ஒன்னும் கிழிக்க முடியாது.புலிகள் வீரம் செரிந்தவர்கள்…புலிகளை அழித்துவிட்டேன் என்று கோக்கரித்த ராஜபஜே எங்கே போனான் ஈழத்தில் இருக்கும் தமிழ் மக்கள் எல்லாரும் புலிதான்.தமிழ் மக்கள்தான் புலிகள்,புலிகள்தான் தமிழ் மக்கள் என்பதை ராஜபஜெகள் புரிந்துகொள்ளவேண்டும்.தமிழிழ தாயகம் பிறக்கும் வரை பிரபாகரனும் புலிகளும் பிறந்து கொண்டிருப்பார்கள். தமிழனுக்கு தனி நாடு கிடைக்கும் வரை ஓய மாட்டேம்…புலிகள் வீரம் செரிந்தவர்கள்…புலிகளை ஒன்னும் பண்ண முடியாது…சிங்களனே நீ அடங்குஈழத்தமிழர் உரிமை நிலைநாட்டப்படும்வரை போராட்டம் எதாவது ஒரு வழியில் நடந்துகொண்டேதான் இருக்கும்…ஈழத்தில் எமது உறவுகளின் படுகொலைகளுக்குத் துணை போகும் துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது.. தமிழனுக்கு எதிராக இந்தியா போரை நடத்த துணை போகும் துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது

  33. who the hell u guys there were lot of peopls death you guys not worry about that??? still you guys talking about pirabaharan death how he death why? once the news come pirabaharan is death right?who belive or not belive thats their problem why agoin and agion talking about it??? who ever said pirabaharn death maybe they not sure about it is that why they write agion and agion??? whats you have problem think about the peopls in the camp.they are human too they are one of us.why you not understand???? pirabaharan is there or not thats not a problem now .the problem is our peopls who are in the camp.if you are a honest writter do some help to that peopls. thanks

  34. Hellou friends!
    Dont defend the horror that done anyone! prabakaran was a curse for tamil. let’s allhope good wiil happen to tamils.first we all have to ??????????????

  35. புலித் தலைவர் 30 வருட காலமாக அப்பாவி தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களுக்கு செய்த பாசிசத்தின் மொத்த வெளிப்பாடே அவரது மரணத்தில் பிரதிபலித்திருக்கிறது. தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பது உலக நீதியாகும். பிரபாகரனின் புகைப்படத்தைப் பார்த்து துடிப்பவர்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன் பொது இடங்களிலும் வணக்கஸ்தலங்களிலும், வயல் வெளிகளிலும், சந்தைத் தொகுதிகளிலும் அப்பாவி ஜீவன்களை சுட்டும் கழுத்தால் அறுத்தும் அடித்தும் கொலை செய்த போது அவர்களி அடைற்த வேதனையை அவர்களுடைய குடும்பத்தினர் பட்ட் வேதனையும் பிரபாகரன் அனுபவித்துப்’ பார்க்க வேண்டாமா????????? போராட்டத்திற்கான காரணங்கள் நியாயமானதுதான், ஆனால்… போராடிய வழி முறைதான் சரியில்லை என்பதை இந்நத் தோல்வி புடம் போட்டுக் காட்டுகின்றது.

  36. srilankan government is a terrorist group/government
    ragabakshas head is gona expload soon…
    he is a bloody war criminal
    go …LTTE go LTTE…
    RAGAPAKSHAN IS A DUM HEAD AND HE KILLS LOTS OF PEOPLE

  37. pirabaharan is only one leader for world wild true living tamils. Nobody can’t win our living GOD PIRABAHARAN.He is only solution for us. In future we all realize i one day. We all close to our freedomland. but your un stedy mind give us this failer situvation. 40 years un save life for his family. why only he needs freedom think………. corect your mistake. follow my presidant pirabaharan. very soon we will meet him in Canada.

  38. The world oldest language is Tamil.We don’t know the year of born.Thaya pola Thamila nesi.Anthe Thamil thaya Nesichavan than Pirabakarn.Karuna unuda thaya nesikirani enral nethamilayum unmayila nesi>Vilaimathukalukaka vilai pokathe.Thamil thaya Tamaraparaniyila valavidu.

  39. All GOSL supporters: Sri Lanka is a failed state with tragic economy and a notorious human rights record. What victory are the Sinhala celebrating? That they live ina country with no freedom of speech? No freedom of ANYTHINg! If you express an opinion and the govt doesn’t like it, ask Lasantha Wickramatunge what happens. It is not a Buddhist state and the leaders know nothig about Buddhist teachings. GoSL has one aim: to wipe out the thamil race completely. Yes what is happening is genocide and the only b*stard who wants to live under Sinhala rule is Karuna. LTTE came up as a response to decades of Tamil oppression. Pirapahran had one aim: to liberate tamils from tamil subjugation and discrimintaion. Why the hell should we learn Sinhala? For what? Thamil is my mother tongue . And in response to this came the LTTE. Anyone who criticises the LTTE deserves to be a second class citizen because you ascribe to being led by the Sinhlese. And before you jump up and down, if Pirapaharan is a such a terrorist, what do you make of dogs like Mahinda and Gotabahaya. ?? State endorsed terrorists. Gotabhaya shelled hospitals full of tamil civilians intentionally over and over again. Gosl is a ruthless barbaric regime but one thing for sure: Gosl is full of mottu chingalavennne. the race is known for being lazy, unambitious and free loading. They only got this far because of karuna and India. But soon they will kill Karuna as well and blame it on the LTTE who are remianing in the east!! What a joke. Sri lanka is a failed state. It will never prosper but the tamil race will live on. Tamils will prosper in the hundreds of countries they live in. They will thrive. Arjunan Ethirveerasingham and Jan Jananayagam — Tamils who have a voice. Sinhala, it will be a cold day in hell before any mottu chingaalavenne comes even close to these two.

  40. The whole Ceylon is belongs to Tamils.Pali speeking people came from India.They originaly Iraniyans(Persiyans or Ariyans)How come the Ceylon belongs to them.Thamaraparani is belongs to the Tamil aboriginals.Kerala ,Kanada,Anthira and Tamil Nadu are belongs to Dravidiyan language.Look at the reginal map All are very close.Except Pali(Singala Ariyan language-Brain washing budist language)Orginaly they are 10 % in Ceylon-Rest of the original Tamils are brain wash by the Budist mongs and converted in to Singala.This is the Truth it was happen continusly 3000 Years.Dark colour people are Tamils (Y cromosomes).White are Ariyans -Singaleese.Some Stupid Tamils Don’t know the truth and act like Karuna .****Note : Aryan Language speeking people are not originaly belong to India .They are Persiyans .They Came from Iran.The Kala Kadavul Buda also a Persiyan (Ariyans).India is not belons to the Ariyan language speeking people.It is belong to the Dravidian language people.Original Indian name was Dravidam.(Not India -Hindia— (Hindi)These Botom line people came from Iran and destroy the dravidian Culture.Ariyans are uncivilised people)They are Jelous about the dravidiyan culture. Sivasium is the Oldest religion.Hinduisum —-Verdict religion—If I want to explain this ,Stupid Iraniyans/ Ariyans have to Shame)Vedkam keda singalavane unudaya Original Irupidanm Iran –Neee anku tyhan poka vendum alathu nangal veraduvom,veradi adipom.

Leave a Reply

Previous post யாழ் மாநகரசபைத் தேர்தலில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் வாக்களிக்கத் தகுதி
Next post அவ்வப்போது கிளாமர் படங்கள்..