அரசசார்பற்ற நிறுவனங்களின் அன்பான உறவுகளுக்கு
தமிழர்கள் நாம் எல்லாம் தனித்துவம், தன்மானம் உடையவாகள் எமது கலாச்சார பண்பாட்டு தடையங்களை பேணி பாதுகாப்பது தலையாய கடமையாகும்.
தற்போது குறித்த நிறுவனங்களில் கலாச்சார பாலியல் சீர்கேடுகள் நடை பெறுவதாக கதை ஒன்று பரவவிடப்பட்டுள்ளது உண்மையில் அவ்வாறான சீர்;கேடுகள் நடைபெற்றால் அவை தவிற்கப்பட்டு திருத்திக் கொள்ளப்பட வேண்டும் அது ஒவ்வொரு தமிழரினதும் கடப்பாடாகும். இதேவேளை குறித்த விடையத்தினை பூதாகாரமாக்கி மேற்படி நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்துப் பெண்களையும் அவமானப்படுத்தும் நோக்கில் பொங்கியெழும் மக்கள்படை என்ற சமுகவிரோதக் கும்பல் செயற்பட்டு வருகிறது.
இக்கும்பல் குறித்த நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களை விலக்கிக் கொள்ளும்படி காலக் கெடுவிதித்தும். எமது இயக்கத் தளபதிமாரின் பெயரினைப் பயன்படுத்தி அனாமதேய தொலைபேசி அழைப்புக்கள் மூலம்; விரட்டி பயமுறுத்தியும் வருகின்றார்கள். மேற்படி நிறுவன ஊழியர்கள் குறித்த கும்பலின் சதித்திட்டம் குறித்து விழிப்பாய் இருக்க வேண்டும். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் அரசசார்பற்ற நிறுவனங்களில் சுமார் (10,000) பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.
இவர்களை வேலையில் இருந்து விலகச் செய்து பொருளாதார ரீதியாக நிற்கதியாக்கி அவர்களை பயமுறுத்தி தமது கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு அழைத்து கட்டாய ஆயுதப்பயிற்சி வழங்கி நடைபெறப்போகும் யுத்தத்தில் பலிக்கடாவாக்கி மாவீரர் பட்டியலை மேலும் உயர்த்தப்போகிறார்கள்.
எனவே சற்று சிந்தியுங்கள் கற்றவர்கள் நாங்கள் இக்காடையர்; கும்பலின் கட்டுக்கதை குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. எமது வேலைகளை விட்டு விட்டு பயிற்சி பெற்று வன்னி சென்று எஜமான்களுக்கு காவல் காக்க வேண்டியதும் இல்லை எமது மண்ணில் எமது பலத்தில் நிம்மதியாக நாம் வாழ்வோம். சாவுக்கான பாதை காட்டும் பொங்கியெழும் மக்கள் படையை துவசம் செய்வோம்.
உங்களைக் காக்க உங்கள் மைந்தர்கள் எந்னேரமும் தயாராகவுள்ளனர். காடையர் கும்பல் பற்றிய தகவல் தடையங்கள் கிடைப்பின் உடன் எமது மீனகம் அரசியல் பணிமனைக்கு 065-2222102 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு ஒத்துழைப்புத் தாருங்கள் உங்கள் பணிகளை ஒழுக்கமாகவும,; சீராகவும் செய்யுமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
மீனகம்
அரசியல் துறை
தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள
Average Rating