ஈராக்கில் குண்டு வெடித்து 40பேர் பலி
Read Time:46 Second
ஈராக்கில் அரசுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள சன்னி அராபி தீவிரவாதிகள் சம்மதம் தெரிவித்தனர். இந்த அறிவிப்பு வெளியான 2 மணி நேரத்தில் பக்பா, ஹில்லா ஆகிய நகரங்களில் குண்டு வெடித்தன. பக்பா நகரில் சைக்கிள் குண்டு வெடித்தது. இதில் 25 பேர் கொல்லப்பட்டனர். 33 பேர் காயம் அடைந்தனர். இதற்கு சில நிமிடங்கள் முன்னதாக ஹில்லா நகரில் உள்ள மார்க்கெட்டில் நடந்த குண்டுவெடிப்பில் 15 பேர் பலியானார்கள். 56 பேர் காயம் அடைந்தனர்.