இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் அவசரக் கூட்டம் இன்று ஒஸ்ரோவில் நடைபெறுகின்றது.

Read Time:1 Minute, 34 Second

யுத்தத்தை தவிர்க்கும் இறுதிக்கட்ட முயற்சி என்கின்றது நோர்வே.

இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தளமை நாடுகளின் அவசரக் கூட்டம் இன்று நோர்வேயின் தலைநகரம் ஒஸ்ரோவில் நடைபெறுகின்றது. பிரபா குழுவின் தற்கொலைத் தாக்குதல்களினால் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலையை அடுத்து யுத்தம் ஒன்று மூலலாம் என்ற அச்சத்திற்கு மத்தியில் முழு அளவிலான யுத்தம் ஒன்றை தடுப்பதற்கான வழிவகைகளை குறித்து ஆராய்வதற்காகவே இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. இரு தரப்பினரும் வன்முறைகளைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கான அழுத்தத்தை கொடுப்பதற்கான வழிகள் குறித்தும் ஆராயப்படவுள்ளதாகவும் நோர்வே குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இவ்விணைத்தளமை நாடுகளின் கூட்டத்தில் பிரபா குழுவின் தற்கொலைத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதோடு பிரபா குழுவுக்கு எதிராக கடும் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் எனவும் இலங்கை அரசாங்கம் இணைத்தளமை நாடுகளிடம் கேட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

www.tamilalai.org

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தற்கொலைதாரி அடையாளம் காணப்பட்டார்!
Next post வாகரையில் பிரபா குழு தமது பயிற்ச்சிக்காக மக்களை தடுத்து வைப்பு