வல்லப்பட்டைகளுடன் சீன நாட்டவர் கைது!!
Read Time:1 Minute, 10 Second
பிடிகல, பொரலுஹேன பிரதேசத்தில் வல்லப்பட்டை மூடைகளுடன் சீன நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மோட்டார் வாகனம் ஒன்றில் வல்லப்பட்டை மூடைகளை ஏற்றிக் கொண்டிருந்த போது குறித்த சீன நாட்டவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 2 கிலோ 600 கிராம் வல்லப்பட்டை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சீன நாட்டவரை எல்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Average Rating