அவசர சிகிச்சை அவசியம்!!
சாலை விபத்தில் ஒருவர் அடிபட்டால் ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் மனிதாபிமானம் எல்லோரிடமும் இருக்கிறது. இதுவே ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் எனும்போது வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடிகிறது. போலீஸ் கேஸ் ஆகிவிடும் என்கிற அச்சமே இதற்குக் காரணம்.
இதையும் மீறி ஒரு சிலர் கத்தியால் குத்துப்பட்டவரின் உயிரைக் காக்கும் பொருட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அங்கோ முதல் தகவல் அறிக்கை (FIR) கொண்டு வர வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்து அவர்கள் வருவதற்குள் நோயாளி உயிருக்கு ஏதேனும் ஆகிவிட்டால் என்ன செய்ய முடியும்? குற்றச் செயல்களால் தாக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் என்ன செய்வது? வழக்கறிஞர் வாஞ்சிநாதனிடம் கேட்டோம்.
‘‘அவசர சிகிச்சை தேவைப்படுகிறது என்றால் எதைப் பற்றியும் யோசிக்காமல் துரிதமாக சிகிச்சையளித்து உயிரைக் காப்பாற்றுவதற்கு முனைய வேண்டும். விபத்தோ, கத்திக்குத்தோ, துப்பாக்கிச்சூடோ – அதைப் பற்றியெல்லாம் மருத்துவர்கள் ஒரு போதும் யோசிக்கக் கூடாது. இதற்கென ஒரு அரசாணையே பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி மனிதாபிமானத்தோடு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கிறவர்களை எந்த நிர்பந்தங்களுக்கும் உட்படுத்தக் கூடாது.
சிகிச்சைக்காக அனுமதித்த பிறகு அவர் தனது வேலைகளுக்காக செல்ல நினைத்தால் அவரைத் தடுக்கக்கூடாது. காவல்துறையினரே கூட அவர் விருப்பப்பட்டாலே ஒழிய மற்றபடி சாட்சியாக வர வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது. தலையில் வெட்டுப்பட்ட ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது மருத்துவரோ, மருத்துவமனை நிர்வாகமோ மறுக்காமல் சிகிச்சையளிக்க வேண்டும். முதல் தகவல் அறிக்கை இருந்தால்தான் சிகிச்சை தருவோம் அல்லது பணம் கட்ட வேண்டும் என்று கூறி சிகிச்சைஅளிக்க மறுத்தால் வழக்கு தொடர முடியும்.
இந்திய மருத்துவச் சட்டத்தின்படி ‘தொழில் ரீதியான ஒழுங்கீனம்’ என இந்திய மருத்துவ சங்கத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்/நிர்வாகம் மீது புகார் அளிக்கலாம். அவர்கள் விசாரணை நடத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வர். முதல் தகவல் அறிக்கை பெற்று வருவதற்குள் தலையில் வெட்டுப்பட்டவர் இறந்து விட்டால் இந்திய தண்டனைச் சட்டம் 304ஏ பிரிவின் கீழ் அலட்சியத்துக்காக வழக்கு தொடர முடியும்.
சேவை குறைபாடு என நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அந்த மருத்துவர்/நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு வாங்கலாம். உயிர்சேதம் ஏற்படுத்தியதாக சிவில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர முடியும். மருத்துவரின் குற்றத்துக்கு மருத்துவமனை நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டும். மருத்துவருக்கு உடந்தையாக இருந்ததாக மருத்துவமனை நிர்வாகத்தின் மீதும் வழக்கு தொடரலாம்’’ என்கிறார் வாஞ்சிநாதன்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating