Breaking News

5 ரேடியோ நிறுவனங்களுக்கு இலங்கை அரசு திடீர் தடை

விடுதலைப் புலிகளின் தாக்குதல் குறித்த செய்தியை ஒலிபரப்பிய ஐந்து ரேடியோ நிறுவனங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இந்த ரேடியோ நிறுவனங்கள் அனைத்தும் ஏபிசி குழுமத்திற்குச் சொந்தமானவை. இதுகுறித்து இலங்கை செய்தித்துறை அமைச்சர் அனுரா...

கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது, ஆசை வார்த்தை கூறி கற்பழித்த கார் டிரைவர் கைது

அல்சூர் போலீஸ் சரகம் கார்ப்பரேஷன் காலனியை அடுத்த உருது பள்ளி கூடத்தில் வசித்து வருபவர் ராஜ். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் ரேகா (வயது 13). இவர் அங்குள்ள ஒரு...

பயங்கரவாத சக்திகளை ஒழித்துக் கட்டுவோம் : வாய் திறந்தார் ராஜபக்சே

"பயங்கரவாத சக்திகளை அடியோடு ஒழித்துக் கட்ட அரசு உறுதி பூண்டுள்ளது,'' என இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கூறினார். அனுராதபுரம் விமான நிலையத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலுக்கு பின்னர், முதல் முதலாக...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முன்னாள் முதல்-மந்திரி மகன் உள்பட 17 பேர் சுட்டு கொலை: நக்சலைட் தீவிரவாதிகள் அட்டூழியம்

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்- மந்திரி பாபுலால் மராண்டி. இவர் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா என்னும் கட்சியை நடத்தி வருகிறார். இவர் தற்போது கோதெர்மா பாராளு மன்ற தொகுதி எம்.பி. ஆக உள்ளார். இவரது...

சட்டவிரோத சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு

சட்டவிரோதமான முறையில் ஜப்பானிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த மூன்று சொகுசு வாகனங்களை ஊருகொடவத்தை சுங்க அதிகாரிகள் நேற்றுக் கைப்பற்றியுள்ளனர். ஊருகொடவத்தை சுங்கப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த கண்டேனர் ஒன்றை சோதனைக்குட்படுத்திய சுங்க அதிகாரிகள் இந்த வாகனங்களைக் கண்டுபிடித்தனர்....

தொடர்ந்து கன மழை-மக்கள் அவதி, போக்குவரத்தும் பாதிப்பு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல நகரங்களில் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கிராமப் பகுதிகளில் பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள்...

கருப்பு அங்கியும், நமீதாவும்

முதல் முறையாக நமீதா கருப்பு அங்கி போட்டு நீதிபதி முன்பு சட்டப் பிரிவுகளை அக்கு வேறு ஆணி வேறாக எடுத்து வைத்து வாதம் புரியப் போகிறார். நமீதா வக்கீலுக்குப் படித்து விட்டாரோ என்று பயந்து...

இந்திய கேப்டன் தோனி நடிகையுடன் காதலா? : கிசுகிசு உண்மையா?

`டுவென்டி-20' உலக கோப்பை வென்றதை தொடர்ந்து இந்திய கேப்டன் தோனி `சூப்பர் ஸ்டார்' அந்தஸ்துக்கு மிக விரைவாக உயர்ந்து விட்டார். இவர் பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ராவை காதலிப்பதாக செய்திகள் வெளியாயின....

புடவையா? மாட்டேன்! -போட்டோகிராபரை நடுங்க வைத்த பிரியாமணி!

பட்டுப்புடவை சரசரக்க, பட்டாசு படபடக்க போஸ் கொடுப்பதுதானே தீபாவளி வழக்கம். அப்படி ஒரு போஸ் கேட்ட போட்டோகிராபருக்கு டோஸ் விழுந்த கதைதான் இது. தீபாவளி படம் எடுக்க ப்ரியாமணி வீட்டுக்கு போனார் ஒரு புகைப்படக்காரர்....

சமயபுரம் கோவில் யானைக்கு மதம் பிடித்தது!

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மாரியப்பனுக்கு மதம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் ஓட்டம் பிடித்தனர். திருச்சி அருகே உள்ள சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் மாரியப்பன் என்ற யானை உள்ளது. இந்த...

கங்கைகொண்டானில் சாப்ட்வேர் பார்க்- கடம்பூர் விமான தளம் புதுப்பிப்பு

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட விமான தளத்தை புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி விமானப்படை அதிகாரிகள் விமான தளத்தை ஆய்வு செய்தனர். கடம்பூரில் ஆங்கிலேயர் ஆட்சி...

பூமியை நெருங்கி வந்த நிலா- பெரிதாக தெரிந்தது

வானில் ஒரு அரிய நிகழ்வாக, நேற்று முன்தினம் இரவு பூமியை மிக அருகில் நெருங்கி வந்தது நிலவு. இதனால் வழக்கத்தை விட 12 சதவீதம் பெரிதாகவும், பிரகாசமாகவும் தெரிந்தது. உலகின் அனைத்துப் பகுதி மக்களும்...

வேகம் பிடிக்கும் சதாப்தி ரயில்கள்!

சதாப்தி ரயில்களின் வேகத்தை படிப்படியாக அதிகரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் டெல்லி - ஆக்ரா இடையிலான போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் மணிக்கு 150 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி -...

தீவகத்திலிருந்து இறைச்சி எடுத்துவர தடை விதிக்குமாறு கோரிக்கை

தீவுப் பகுதியில் இருந்து கால்நடை களும் இறைச்சியும் கடத்தப்பட்டு மாநகரசபைப் பிரிவில் விற்பனை செய் யப்படுகின்றன. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மாநகரசபைப் பகுதியில் இறைச்சிக் கடை நடத்தும் வியாபாரிகள் கோரியுள்ளனர். இது...

இந்தோனேஷியாவில்: படகு கவிழ்ந்து 30 பேர் பலி

இந்தோனேஷியாவில் சுலாவேசி தீவில் உள்ள கேந்தாரி நகரில் உளள கடலில் ஒரு படகு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அங்கு நிறைய தீவுகள் உள்ளன. தீவுகளுக்கு இடையே பயணிகள் போக்குவரத்துக்கு படகுகளே பயன்படுகின்றன. இப்படி பயணிகளை...

இரண்டடுக்கு சூப்பர் ஜம்போ விமானம் : `ஏர் பஸ் ஏ-380′ சிட்னிக்கு முதல் பயணம்

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர் பஸ் ஏ-380, முதல் முறையாக வர்த்தக ரீதியிலான பயணத்தை துவக்கியது. சிங்கப்பூரில் புறப்பட்ட இந்த `சூப்பர் ஜம்போ' விமானம், ஏழு மணி நேர பயணத்துக்குப் பிறகு ஆஸ்திரேலிய...

இன்டர்நெட் பயன்படுத்துவோர் உஷார்: அடையாளம் திருடி பெரும் மோசடி

இணையதளங்களை பயன்படுத்துவோர் தங்களின் அடையாளம் திருட்டுப் போவதால், பெரும் பொருள் இழப்புடன், மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடுகிறது. செய்யாத குற்றத்துக்கு சில சமயங்களில் அவர்களே பொறுப்பேற்க நேரிடுகிறது. வளர்ந்த நாடுகளிலும், வளரும் நாடுகளிலும், இணையதளங்களில்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

பாகிஸ்தானில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தம்

பாகிஸ்தானில் இடைக்கால அரசு அமைப்பது குறித்து அந்நாட்டு அரசுக்கும், பெனாசிரின் கட்சிக்கும் இடையே நடக்கவிருந்த பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 8 ஆண்டுகளாக வெளிநாடுகளில் வசித்து வந்த பாகிஸ்தான்...

அவுஸ்திரேலிய பயணத்தை தவிர்க்குமாறு அர்ஜுனா கூறியதை ஏற்க மறுத்தார் முரளிதரன்

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை தவிர்க்கும்படி அர்ஜுன ரணதுங்க கூறிய அறிவுரையை ஏற்க முரளிதரன் மறுத்துவிட்டார். சமீபத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்போது சில ஆட்டங்களில் அவுஸ்திரேலிய வீரர் சைமண்ட்சை ரசிகர்கள்...

த்ரிஷாவுக்கு அம்மாவா? “நோ…நோ…” -குஷ்பு ஓட்டம்.

அபியும் நானும் படத்தில் த்ரிஷாவுக்கு அம்மாவாக நடிக்க அழைத்தார்கள் குஷ்புவை. முதலில் ஒப்புக் கொண்டவர் பிறகு என்னாச்சோ? அச்சச்சோ...நான் மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அவருக்கு பதிலாக வேறொரு நடிகைக்கு வலை வீசிக் கொண்டிருக்கிறார்கள். ஏன்...

தீவிரவாதத்தை ஒழிக்கும் முயற்சியில் மாலைதீவு அரசு தீவிரம்

சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தமது உறவைக் கட்டியெழுப்பும் இஸ்லாமியப் போராளிகள் குழுவின் முயற்சியை சீர்குலைக்கும் நடவடிக்கையினை ஆரம்பித்திருப்பதாக மாலைதீவின் ஜனாதிபதி மௌமூன் அப்துல் கையூம் தெரிவித்துள்ளார். மேலும், மாலைதீவிலுள்ள 330,000 ஸுன்னி முஸ்லிம்களில் ஒரு...

பால்மா வாங்க பணம் இல்லை இளம் தாய் தற்கொலை

தனது இரண்டு மாத குழந்தைக்கு பால் மா வாங்குவதற்கு பணம் இல்லாததால் விரக்தியடைந்த இளம் தாய் நஞ்சு குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தெனியாய - தாரங்கல சதன் குறூப் தேயிலைத் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது....

விடுதலைப் புலிகளின் உடல்கள் நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்டமைக்கு இடதுசாரி முன்னணி கடும் கண்டனம்

அநுராதபுரம் விமானப்படைத்தள தாக்குதலின் போது உயிரிழந்த விடுதலைப் புலிகளின் உடல்கள் நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டமையை இடதுசாரி முன்னணி வன்மையாக கண்டித்துள்ளது. இன்றைய நாகரிக உலகில் மனித கௌரவத்தை மதிக்கும் எவரும் இந்த ஈனச் செயலை...

அமெரிக்காவில் புலிகளுக்கு எதிராக மூன்றாவது வழக்கு

நியூயோர்க்கிலிருந்து வெளியாகும் அமெரிக்காவின் பிரபல பத்திரிகையாகிய "ரெலி நியூஸ்" கடந்தவாரம் வெளியிட்டிருந்த செய்திகளில் அண்மையில் புலிகள் இயக்கத்தினர் எட்டுப்பேர் நியூயோர்க் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டது பற்றியும் அவர்கள் மீது நியூயோர்க் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது பற்றியும்...

விமானப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு முன்னர் அந்தப் பகுதிக்கு புலிகள் வந்து சென்றுள்ளனர்

அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு முன்னர் அந்தப்பகுதிக்கு விடுதலைப் புலிகள் வந்து சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விமானப்படைத்தளம் மீதான தாக்குதல் தொடர்பாக, சம்பவம் நடைபெற்ற நேரம் முதல் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு...

புயல் சின்னத்தால் மழை: 7 மாவட்டங்களில் வெள்ள அபாயம்; பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் தீவிரம் அடைந்துள்ளது. வங்கக் கடலில் தென் மேற்கு பகுதியில் தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையே குறைந்த காற்ற ழுத்த...

வள்…வள்..வள்…! நாயாய் துரத்தும் புகார்! -ஓடி ஒளியும் ஸ்டண்ட் மாஸ்டர்!

நாயா அலைஞ்ச நாலு காசு சம்பாரிக்கிற நேரத்திலே பேயா வந்து பிரச்சனையை கொடுக்குது ஒரு நாயி....' இப்படி புலம்பிக் கொண்டிருக்கிறார் கனல் கண்ணன். ஸ்டண்ட் மாஸ்டராக இருந்தாலும் அவ்வப்போது திரையில் தோன்றி காமெடி செய்வது...

ஆபரேஷன் செய்தபோது 9 மாத குழந்தையின் நெஞ்சுக்குள் டாலரை வைத்து தைத்த டாக்டர்கள்

டெல்லியை சேர்ந்த உதய குமார் என்ற 9 மாத ஆண் குழந்தைக்கு காய்ச்சல், ஜலதோஷம், நெஞ்சடைப்பு ஆகிய கோளாறுகள் இருந்தன. இதனால் அக்குழந்தையை டெல்லியில் அரசுக்கு சொந்தமான லோக் நாயக் ஜெயபிரகாஷ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்....

கலிபோர்னியாவில் காட்டுத் தீ: 5 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவு; தீயில் கருகி 5 பேர் பலி; 1,500 வீடுகள் எரிந்து சாம்பல்

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீக்கு 5 பேர் பலியாகி உள்ளனர். 1,500 வீடுகள் எரிந்து சாம்பலாயின. இதை தொடர்ந்து அந்த பகுதியில் வசிக்கும் 5 லட்சம் பேரை வீடுகளை விட்டு வெளியேறும்படி...

மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமைக்கப்பட வேண்டும். இலங்கையிடம் அமெரிக்கா வேண்டுகோள்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஐ.நா. வின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் லூயிஸ் ஆர்பறின் அறிக்கையின்படி,...

வடிவேலுவுடன் ஸ்ரேயா நடிக்கக் காரணம்

செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பில் வடிவேலு மூன்று வேடங்களில் நடிக்கும் "இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாட அழைப்பு...

இருதரப்பு உறவை வலுப்படுத்திக் கொள்ள இந்தியா-நார்வே முடிவு

இருதரப்பு பொருளாதார உறவை வலுப்படுத்திக் கொள்ள இந்தியா, நார்வே ஆகிய இருநாடுகளும் முடிவெடுத்துள்ளன. 3 நாள் பயணமாக நார்வே சென்றுள்ள நிதி அமைச்சர் ப.சிதம்பரம், புதன்கிழமை அந்நாட்டு நிதி அமைச்சர் கிறிஸ்டின் ஹால்வர்சன், சுற்றுச்...

டயானா இறந்துவிட்டார்; விரைந்து வா என புகைப்படக்காரர் கூறினார்

இளவரசி டயானா கார் விபத்தில் பலியானது குறித்த வழக்கு விசாரணை நான்காவது வாரமாக நடைபெற்று வருகிறது. விபத்தை நேரில் பார்த்த யானிக் சென்னா என்ற பிரான்சு நாட்டுக்காரர் நீதிபதி முன் புதன்கிழமை வாக்குமூலம் அளித்தார்....

21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்ற வியாபாரிகள் கைது

மாத்தறை நகரில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் விநியோகம் செய்த 37 பேரை கலால் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மாத்தறை நகரில் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட கலால் திணைக்கள அதிகாரிகள் இவர்களைக் கைது...

இந்தியா முழுவதும்: ஒரே நாளில் 67 பேருக்கு ஆயுள் தண்டனை

இந்தியா முழுவதும் 5 பெரிய நகர கோர்ட்டுகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5 வெவ்வேறு வழக்குகளில் 67 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மந்திரி, உயர் போலீஸ் அதிகாரி, பிரபல வக்கீல்,...

பெனாசிர் ஊர்வலத்தில் குண்டு வெடிப்பு: 20 பேரிடம் துருவித் துருவி விசாரணை

பெனாசிர் ஞீட்டோ நாடு திரும்பிய போது அவரை வரவேற்று நடந்த ஊர்வலத்தின் போது ஏற்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 20 பேரை பிடித்து போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்....

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் கைது

கொழும்பிலுள்ள முன்னணி பாடசாலையொன்றில் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி, உறுதியளித்து அதற்காக 6 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்....