லண்டனில் வன்முறையில் ஈடுபட்டதாக 6 இலங்கை தமிழர்கள் மற்றும் இந்தியர் ஒருவர் கைது

லண்டனில் வன்முறையில் ஈடுபட்டதாக 6 இலங்கை தமிழர்கள் மற்றும் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கத்தியால் ஒருவரின் தலையை சீவி கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர்களுக்கு 3 முதல்...

இந்திய மருந்து இறக்குமதிக்கு பாகிஸ்தான் அரசு தடை

இந்திய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. பாகிஸ்தானில் தயாராகும் மருந்துகளை இறக்குமதி செய்யக்கூடாது என பிரதமர் யூசுப் ராஸô கிலானி அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது பாகிஸ்தானில் தயாரிக்கப்படாத 13 தடுப்பு...

புலிகளுக்கு ஆயுதம் வாங்க உதவிய கடற்படை ஜெனரலுக்கு அமெரிக்காவில் சிறைத் தண்டனை

சில வருடங்களுக்கு முன் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் வாங்க உதவியவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இந்தோனேசியக் கடற்படை ஜெனரலாகிய அமெரிக்கர் ஒருவரை அமெரிக்க பொலிஸ் அதிகாரிகள் கைது செய்திருந்தனர். எரிக் வோட்ரலோ...

ஒலிம்பிக் தொடக்க விழா: மன்மோகனுக்கு அழைப்பில்லை?- சீனா விளக்கம்

வரும் ஆகஸ்ட்டில் சீனாவில் நடைபெறும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்கேற்க இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அந்நாடு அழைப்பிதழ் அனுப்பவில்லை என வெளியான செய்தியை சீன வெளியுறவுத் துறை மறுத்துள்ளது. ஒலிம்பிக் போட்டி தொடக்க...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

நேற்று முன்தினம் இலங்கை பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 82 விடுதலைப்புலிகள் பலி

இலங்கையின் வடபகுதியில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் புலிகளின் கடற்படை தளத்தில் இறந்த 51 பேரையும் சேர்த்து மொத்தம் 82 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடபகுதியை புலிகளிடம்இருந்து முழுவதுமாக மீட்பதற்கு...

அமெரிக்கா: சாண்ட்விச்சுக்குள் இருந்த கத்தி

அமெரிக்காவை சேர்ந்தவர் ஜான் அக்னேசினி. 26 வயதான இவர் ஒரு பத்திரிகையில் பக்க வடிவமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பாதாள ரெயிலில் தான் அலுவலகத்துக்கு செல்வது வழக்கம். ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு கடையில்...

நடிப்புக்கு முழுக்குப் போட்டு திருமதி கோபிகா அஜிலேஷாக திருமண வாழ்க்கைக்கு திரும்புகிறார் கோபிகா

இயக்குனர் சேரனின் 'ஆட்டோ கிராஃப்' மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கோபிகா. தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும்போதே, வீட்டில் இவருக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். அயர்லாந்தில் மருத்துவராக...

நவநாகரிக நகரங்கள்: முதல் இடம் நியூயார்க்; மும்பைக்கு 22வது இடம்

நவநாகரிக நகரங்கள் வரிசையில் முதல் இடம் பெறுகிறது அமெரிக்காவின் நியூயார்க் நகரம். மும்பைக்கு 22-வது இடமும் தில்லிக்கு 24-வது இடமும் கிடைத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாகவே நவநாகரிக நகரங்கள் வரிசையில் நியூயார்க் முதலிடம் பெற்று...

சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்ப நூற்றுக்கணக்கான இலங்கை பெண்கள் காத்திருப்பு

சவூதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பி வருவதற்காக சுமார் 200 இலங்கைப் பணிப்பெண்கள் அரசாங்கத்தின் தடுப்பு முகாமில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதேசமயம், 169 பேர் கொழும்பு திரும்புவதற்காக தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் காத்திருப்பதாக சவூதி அரேபியாவிலுள்ள...

இறந்து விட்டதாக கூறப்பட்ட குழந்தை உயிருடன் இருப்பது கண்டுபிடிப்பு

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் உரிய காலத்திற்கு முன் பிறந்த பிள்ளை இறந்து விட்டதாகக் கூறப்பட்ட போதும் பின்னர் அது உயிரோடிருப்பது தெரியவந்தது. டாக்டர்களின் கவனக்குறைவால் அந்தப் பிள்ளையை பெற்றோர் இழக்கும் சூழ்நிலை ஏற்பட்ட...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

ஜ.நாவின் வதிவிடப் பிரதிநிதி மட்டக்களப்புக்கு திடீர் விஜயம்

மட்டக்களப்புக்கு இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்ட ஜ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியும் மற்றும் மனிதாபிமான பணிக்கான இணைப்பாளருமான நியூ பொனே மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து நேரடியாக ஆராயந்துள்ளார் ஜ.நாவின்...

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் 3 ஆயிரம் இந்தியத் தொழிலாளர்கள் விடுதலை

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ராஸ் அல் கைமாக் நகரில் ஒரு கட்டுமான கம்பெனியில் வேலை பார்த்த இந்திய தொழிலாளர்கள் தாங்கள் தங்க வைக்கப்பட்டு உள்ள குடியிருப்பில் மோசமான உணவு வழங்கப்படுவதை எதிர்த்தும் அங்கு...

வடமத்திய மாகாணசபைத் தேர்தல் பாதுகாப்புக் கடமைகளுக்காக 8000 படைவீரர்கள்

வடமத்திய மாகாணசபைத்தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக 8000 படைவீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன தேர்தல் நடைபெறும் காலத்தில் மேலும் பாதுகாப்புப்படைவீரர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிபொலிஸ் மா அதிபர் ஜே.ஜீ.ஜீ...

ஸ்பெயின் குண்டு வெடிப்பு வழக்கில் நால்வர் விடுவிப்பு

மார்ச் 2004ல் ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் நடந்திருந்த சுமார் இருநூறு பேரை பலிகொண்ட பயணிகள் ரயில் தொடர் குண்டுவெடிப்புகள் சம்பவத்தில் சதித் திட்டம் தீட்டியவர்களாக குற்றம்சாட்டப்பட்டிருந்த நான்கு பேரை ஸ்பெயின் உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது. அவர்கள்...

சார்க் மாநாட்டுக்கு சமாந்திரமாக கொழும்பில் நடைபெறவிருக்கும் சார்க் மக்கள் மாநாடு

சார்க் மாநாட்டுக்கு சமாந்திரமாக கொழும்பில் நடைபெறவிருக்கும் சார்க் மக்கள் மாநாட்டில் பங்கு பற்றுவதற்காக 350பிரதிநிதிகள் நேற்;று கொழும்பு வந்து சேரவுள்ளனர். சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், மாலைதீவு, நேபாளம், பூட்டான்,...

பிரிட்டனில் தஞ்சம் கோருபவர்கள் தொடர்பில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு

பிரிட்டனில் தஞ்சம் கோரியிருந்த தமிழ் அகதி ஒருவரை இலங்கை திருப்பியனுப்புவதற்காக செய்யப்பட்ட முயற்சிகளை எதிர்த்து அந்த அகதி மேற்கொண்டுவந்த முறைப்பாட்டுக்கு ஆதரவாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் முடிவு தெரிவித்துள்ளது. பெயர் வெளியிடப்படாத இந்தத்...

வவுனியா பூந்தோட்டம் அகதிமுகாமில் ஏற்பட்ட தீவிபத்தில் முகாம் முற்றாக சேதம்

வவுனியா பூந்தோட்டம் அகதிமுகாமில் ஏற்பட்ட தீவிபத்தில் முகாம் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் 5பேர் தீக்காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்றுக்காலை 9.30 மணியளவில் இந்த தீவிபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது மின்சார ஒழுங்கின்மை காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக வவுனியா...

பிள்ளையான் குழுவின் புதிய ஆலோசகரும் ஈ.பி.டீ.பி இன் கொலையும்.

ஈ.பி.டி.பி இன் முன்னை நாள் ஆலோசகரும் ஆதரவாளாருமான கலாநிதி விக்னேஸ்வரன் ரி.எம்.வீ.பி யின் (பிள்ளையான்) ஆலோசகராக மகிந்த அரசின் அனுசரணையுடன் நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ள வேளையில், ஈ.பி.டி.பி.யினால் சில தினங்களுக்கு முன்னர் கடத்திச்...

உலகில் வாழும் பொதுமக்களில் ஆயிரத்துக்கு ஒருவர் ஆயுதங்களை வைத்துள்ளனர்

உலகளாவிய ரீதியில் பாரிய அளவிலான சிறுஆயுதங்களை மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளதாக சுவிட்ஸலாந்தின் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுததவிர்ப்பு மாநாடு என்ற இந்த நிறுவனம் இதுதொடர்பாக அறிக்கை ஒன்று நேற்று...

கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த 5மாணவர்கள் பதுளையில் கைது

கஞ்சாவை மிக ரம்மியமாக புகைத்துக்கொண்டிருந்த உயர்தரவகுப்பு மாணவர்கள் ஐவரை பதுளையில் பொலிஸார் நேற்றுக் கைது செய்துள்ளனர் குறிப்பிட்ட பாடசாலையொன்றில் இருந்து பதுளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அசோக் விஜயரட்ணவிற்கு கிடைத்த தகவலொன்றினையடுத்து அங்கு விரைந்த...

மோசடி வழக்கொன்றில் பிக்கு மீது கல்கிஸ்ஸை நீதவான் பிடியாணை

மோசடி வழக்கொன்றில் பிணையில் விடப்பட்டிருந்த பிக்கு ஒருவரை கைது செய்ய கல்கிஸ்ஸை நீதவான் ஹர்ஷாசேதுங்க பிடியாணை பிறப்பித்துள்ளார். ஐந்து இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலை பெற்று தருவதாக மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் இவர் மீது...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

நம்பகத்தன்மையை இழந்து விட்டார் முஷாரப்: பராக் ஒபாமா

பாகிஸ்தான் அதிபர் முஷாரப் நம்பகத்தன்மையை இழந்து விட்டார் என்று அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அவர், சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்....

வெளிநாட்டவரின் இருநாள் ஆட்டத்துக்காக 60வருடம் வாழ்ந்த மக்களை விரட்டுவதா? -கொம்பனித்தெரு விவகாரத்தால் ஐ.தே.கட்சி சீற்றம்

சார்க் மாநாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்துள்ள 200 வீடுகளை இடித்துத்தள்ளி அம்மக்களை அங்கிருந்து வெளியேற்றும் அரசின் திட்டத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது வெளிநாட்டுத்தலைவர்கள் இங்கு வந்து இரண்டு...

செங்கலடி ஈ.பி.டி.பி முகாம் பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் மீட்பு, ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் கைது

மட்டக்களப்பு ஏறாவூர் செங்கலடி கொம்மாதுறைப் பகுதியில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி.யின் அலுவலகத்திற்கு பின்புறமாகவுள்ள காணியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த ஒருவரது சடலம் காவல்துறையினரால் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் உத்தரவின் பேரில் இந்த சடலம் ஈ.பி.டி.பியின் முன்னர்...

தொடராக திருடிவந்த பன்னிரண்டு வயதுடைய இரு சிறுவர்கள் பதுளையில் கைது

வீடுகள் பலவற்றில் பெறுமதிமிக்க நகைகள் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணத்தை திருடினர் என்ற சந்தேகத்தின் பேரில் பன்னிரண்டு வயதுடைய இரு சிறுவர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது பதுளை பொலிஸ் நிலையப்...

எகிப்து நாட்டின் வடக்கு பகுதியில் பஸ்- கார்கள் மீது ரெயில் மோதி 40 பேர் பலி

எகிப்து நாட்டின் வடக்கு பகுதியில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. அங்குள்ள ஒரு ரெயில்வே கேட் அடைக்கப்பட்டு இருந்ததை தொடர்ந்து கேட்டின் இரு பக்கமும் ஏராளமான பஸ்கள் மற்றும் கார்கள் வரிசையாக காத்து நின்றன....

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபியின்) உள் முரண்பாடுகளும், தீர்க்கத் தெரியாமல் தவிக்கும் நலன் விரும்பிகளும்..

தமிழ்ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து பல வருடகாலங்களாக இலங்கை அரசாங்கத்திற்கெதிராகப் போராடி வந்தபோதும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைமையின் மாற்றான் மனப்பாங்கு, தனிப்பட்ட சர்வாதிகாரம், ஒரு பக்க நியாயம், மாற்றுத்தமிழ் இயக்க எதிர்ப்பு,...

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உடன் காதலா?: இந்தி நடிகர் ஷாகித் கபூர் பதில்

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவை காதலிப்பதாக வெளிவரும் வதந்திகளால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படுத்த முடியாது என்றும் இந்தி நடிகர் ஷாகித் கபூர் தெரிவித்தார். டென்னிஸ் விளையாட்டில்...

கிளிநொச்சி கொண்டு செல்ல தயாராக மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீட்பு

கிளிநொச்சிக்கு செல்வதற்குத் தயாரான நிலையில் இருந்த இரண்டு பாரஊர்திகள் நேற்றுக்காலை வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது பெருமளவிலான பென்டோச் பற்றரிகள், செப்புத்தகடுகள், சீருடைகள், வெல்டிங் குச்சிகள் போன்றவற்றுடன் கைப்பற்றப்பட்டுள்ளன. பார...

மலேசியாவில் முன்னாள் துணைப்பிரதமர் அன்வர் மீண்டும் கைது

மலேசியாவில் முன்னாள் துணைப்பிரதமர் அன்வர் இப்ராகிம் மீது கூறப்பட்ட செக்ஸ் குற்றச்சாட்டை தொடர்ந்து நேற்று அவர் கைது செய்யப்பட்டார். மலேசியாவில் மகாதிர் ஆட்சிக்காலத்தில் துணைப்பிரதமராக இருந்தவர் அன்வர் இப்ராகிம். பொருளாதார நிபுணரான இவர் மகாதிரின்...

ஈ.பி.டி.பியினரால் கடத்திச் செல்லப்பட்ட பிள்ளையான் குழு உறுப்பினர் கொன்று புதைக்கப் பட்டுள்ளார்

ஈ.பி.டி.பியினரால் கடத்திச் செல்லப்பட்ட பிள்ளையான் குழு உறுப்பினர் கொன்று புதைக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன பிள்ளையான் குழுவினரால் நேற்றையதினம் இரண்டு ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் குறித்த ஈ.பி.டி.பி உறுப்பினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது...

கடனை திரும்ப செலுத்தும் திறன் குறைந்துவிட்டது: இந்தியா பற்றி சர்வதேச நிறுவனம் கருத்து

வாங்கிய கடனை திரும்பச் செலுத்தும் திறன் இந்தியாவிடம் குறைந்துவிட்டதாக சர்வதேச தர நிறுவனம் ஃபிட்ச் தெரிவித்துள்ளது. ஃபிட்ச் நிறுவன அறிவிப்பு வெளியானவுடன் இந்தியப் பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. மத்திய அரசின் நிதி...

விடத்தல்தீவு இராணுவத்தின் வசம்

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மன்னார் விடத்தல் தீவு பிரதேசத்தை நேற்றுக்காலை இராணுவத்தினர் கைப்பற்றியிருக்கின்றனர் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது கடற்புலிகளின் பிரதான தளம் ஒன்று அமைந்திருந்த இந்தப் பகுதியில் படையினர் கடந்த சில தினங்களாகமேற்கொண்ட படைநடவடிக்கை...

துபையில் வெயில் 122 டிகிரியை தாண்டியது..

துபையில் வெயில் அளவு 122 டிகிரியை தாண்டியுள்ளது. பாலைவனப் பூமியான ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது வெயில் சுட்டெரிக்கிறது. சராசரியாக அங்கு 113 டிகிரி அளவிற்கு வெப்பம் நிலவுகிறது. துபையில் மிக அதிக பட்சமாக...

ஒரிசாவில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: அதிரடிப் படை போலீசார் 21 பேர் பலி; கண்ணிவெடியில் சிக்கியவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்

ஒரிசாவில் விசேஷ அதிரடிப் படை போலீசார் சென்ற வேனை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் கண்ணிவெடி வைத்து தகர்த்தனர். பின்பு, போலீசார் உயிர் தப்ப முயன்றபோது அவர்களை சரமாரியாக சுட்டுக் கொன்றனர். ஒரிசா மாநிலத்தின் மல்காங்கிரி மாவட்டத்தில்...