உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் தமிழக முதல்வர்

இலங்கையில் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்படவேண்டுமெனக் கூறி தமிழக முதல்வர் மு.கருணாநிதி மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. திங்கட்கிழமை அதிகாலை அண்ணா நினைவிடத்துக்குச் சென்ற மு.கருணாநிதி திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார். இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்த...

பிரித்தானிய, பிரான்ஸ், சுவீடன் வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கை விரைவு

பிரித்தானிய, பிரான்ஸ் மற்றும் சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்ச போர்நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையில் இவர்கள் இலங்கை வரப்போவதாக அறிவித்துள்ளனர். “பிரித்தானிய வெளிவிவகாரச்...

பானமை உகந்தைப் பிரதேசத்தில் ஐந்து மீனவர்கள் சுட்டுக்கொலை

அம்பாறை பொத்துவில் பானமை, உகந்தைக் கோயிலுக்கு அருகிலுள்ள கடலில் மீன்பிடிப்பதற்காக சென்றிருந்த ஐந்து மீனவர்கள் ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டுள்ளதாக பொத்துவில் பொலீசார் தெரிவித்துள்ளனர். பானமை வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு...

அவுஸ்திரேலியாவின் வடக்குக் கரையை சென்றடைந்த 56பேர் கைது

அவுஸ்திரேலியாவின் வடக்குக் கரையோரப் பகுதியை நோக்கி 56பேருடன் சென்றடைந்த படகொன்றினை அந்நாட்டு அதிகாரிகள் வழிமறித்துள்ளனர். படகில் பயணித்த 54பேரையும், மாலுமிகள் இருவரையும் அவுஸ்திரேலியக் கடற்படையினர் கைது செய்துள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சின் பேச்சாளர் பொப்...

ஜனாதிபதியுடனான இந்திய உயர்மட்டத்தினரின் சந்திப்பில் போர்நிறுத்தம் பற்றி பேசப்படவில்லை-ஜனாதிபதி ஆலோசகர்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கொழும்பில் வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவுச்செயலர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் மேற்கொண்ட கலந்துரையாடலின்போது போர்நிறுத்தம் குறித்து பேசப்படவே இல்லையென்று ஜனாதிபதியின் செயலாளரும், இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தவருமான லலித் வீரதுங்க...

புலி உறுப்பினர்கள் 52பேர் சரண்! : சரணடைந்தவர்களின் 23பேர் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்!

பெருமளவில் படையினரிடம் சரணடைந்துள்ளனர். நேற்றையதினம் புலிகளின் 52 உறுப்பினர்கள் வளைஞர்மடம் பகுதியில் சரணடைந்துள்ளனர். சரணடைந்த மேற்படி புலி உறுப்பினர்களில் 23பேர் புலிகளிடம் பயிற்சிபெற்ற 13 வயதுக்கு 18 வயதுக்கும் இடைப்பட்ட பாடசாலை மாணவர்கள் என்றும்...

மூன்றாம் தரப்பிடம் சரணடையுமாறு கோருவது நியாயமற்றது

விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்து மூன்றாம் தரப்பிடம் சரணடையுமாறு வெளிநாடொன்று கோருவது நியாயமற்றது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்ற வகையில் உள்ளகப்...

புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்: இணைத்தலைமை நாடுகள் கோரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமெரிக்கா தலைமையிலான டோக்கியோ இணைத்தலைமை நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக இணைத்தலைமைகள் சார்பில் அமெரிக்க காங்கிரஸ் செய்மதித்...

விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்ச போர்நிறுத்த அறிவிப்பு: அரசாங்கம் நிராகரிப்பு

சர்வதேச சமூகம் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு ஒருதலைப்பட்ச போர்நிறுத்தமொன்றை விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். எனினுமஇ விடுதலைப் புலிகளின் இந்த ஒருதலைப்பட்ச அறிவிப்பை ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கும் இலங்கை அரசாங்கம்இ விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டுமென வலியுறுத்தியுள்ளது....

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு...

வலைஞர்மடமும் கைப்பற்றப்பட்டது: பாதுகாப்பு அமைச்சு

விடுதலைப் புலிகளின் இறுதி மறைவிடமான வலைஞர்மடத்தையும் இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் வலைஞர்மடம் பகுதியை இராணுவத்தின் 58வது படைப்பிரிவினர் நேற்று சனிக்கிழமை மாலை கைப்பற்றியதாகவும்இ இந்தப் பகுதியை இராணுவத்தினர் இன்று...

எதிர்கட்சி தலைவருடன் பகிரங்க விவாதம் நடத்த ஜனாதிபதி இணக்கம்

ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பகிரங்க விவாதம் நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். முக்கிய பிரச்சினைகள் குறித்த எதிர்கட்சியின் கேள்விகளுக்கு பதிலளிக்க தாம் தயார் என அவர் சுட்டிக்...

மேல்மாகாணசபைத் தேர்தல், கம்பஹா, களுத்துறையில் ஆளும் கூட்டணி வெற்றி, கொழும்பில் எதிர்க்கட்சி வெற்றி!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களை உள்ளடக்கிய மேல்மாகாணசபைத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தின் அதிகாரத்தினை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தன்வசமாக்கியுள்ளது. இந்த வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6லட்சத்து 24ஆயிரத்து 530வாக்குகளைப்...

கப்பம் பெறவேண்டிய தேவை எமக்கில்லை; தமக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் கண்டியில் கப்பம் பெறுவோரை உடன் கைது செய்யவும் -கருணாஅம்மான்

தனக்கும் தனது கட்சித் தொண்டர்களுக்கும் இழுக்கை ஏற்படுத்தும் வகையில் கண்டியில் தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்தி கப்பலம் பெற முயற்சிக்கும் நபர்களை உடனடியாக கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் வி.முரளிதரன் (கருணா அம்மான்) பொலீசாரிடம்...

ஜோன் ஹோல்ம்ஸ் இலங்கை வந்தார்; வவுனியா சென்று நிலைமைகளைப் பார்வையிடுவார்

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜோன் ஹோல்ம்ஸ் திட்டமிட்டபடி சனிக்கிழமை இரவு இலங்கை வந்தடைந்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் வவுனியா சென்று அங்குள்ள மக்களின் நிலைமைகளை நேரில் பார்வையிடுவார் என்று...

இடம்பெயர்தோரால் நிரம்பி வழியும் வவுனியா; உணவுக்கும், குடிநீருக்கும் கையேந்தும் இலட்சக்கணக்கான மக்கள்

வன்னியில் மோதல் தவிர்ப்புப் பிரதேசத்திலிருந்து கடந்த 20ம் திகதி முதல் வந்துசேர்ந்த ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டு வருவதால், வவுனியா நகரம் இடம்பெயர்ந்த வன்னி மக்களால் நிரம்பி வழிகிறது. பஸ்களிலும்,...

இடம் பெயரும் மக்களுக்கு சமைத்து உதவ 115 முஸ்லிம்கள் வன்னி விரைவு

வன்னியில் இடம் பெயர்ந் துள்ள மக்களுக்கு உணவு சமைத்து உதவுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தி லிருந்து 115 முஸ்லிம்கள் நேற்று வன்னிக்கு சென்றனர். அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர்அலியின் வேண்டுகோளுக்கிணங்க...

இடம்பெயர்ந்த மக்களுக்கு புளொட் தொடர்ந்து நிவாரண உதவி

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் வவுனியாப் பகுதியை வந்தடைந்த பொதுமக்களுக்கு புளொட் அமைப்பின் நிவாரணப் பிரிவினர் நேற்றையதினமும் 40,000ற்கும் அதிகமான உணவுப் பொதிகளை விநியோகித்துள்ளனர். நேற்றுமுன்தினமும் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவுப் பொதிகள் இம்மக்களுக்கு வழங்கப்பட்டமை தெரிந்ததே....

புலிகளின் பிடியில் சிக்கியிருந்த கிறிஸ்தவ போதகர்கள், கன்னியாஸ்திரிகள் 21பேர் படையினரிடம் தஞ்சம்

வன்னியின் முல்லைத்தீவு புதுமாந்தளன் பாதுகாப்பு வலயத்தில் புலிகளால் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ போதகர்கள் மற்றும் கன்னியாஸ்தரிகள் என 21பேர் அங்கிருந்து தப்பி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று முற்பகல் 10.30மணியளவில் ஒருவாறு அங்கிருந்து...

வவுணதீவில் துப்பாக்கிப் பிரயோகம், பால் விற்கச் சென்றவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுணதீவு பொலீசார் தெரிவித்துள்ளனர். வவுணதீவு பிரதேசத்திற்கு பால் விற்பனைக்காக சென்றவரின்மீதே ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றிருப்பதாகவும், மேற்படி துப்பாக்கிச்...

ஜேர்மனி பெர்லின், இலங்கைத் து}தரகம்மீது புலிகளின் ஆதரவாளர்கள் தாக்குதல்

ஜேர்மன் பெர்லினில் அமைந்துள்ள இலங்கைத் து}தரகத்தின்மீது புலிகளின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது அங்கு வந்த புலி ஆதரவாளர்கள் இரண்டு பெற்றோல் குண்டுகளை வீசியதாகவும், இதில் ஒன்றே வெடித்துள்ளதாகவும்...

புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு மூன்றாம் தரப்பிடம் சரணடைய வேண்டும் -அமெரிக்கா கோரிக்கை

புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு மூன்றாம் தரப்பிடம் சரணடைய வேண்டுமென அமெரிக்கா கேட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்றையதினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பேச்சாளர் ரொபேர்ட் வூட் இதனைத் தெரிவித்துள்ளார். பொதுமக்களை...

பிரபாகரன் எந்த வழியில் தப்புவார்?

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் நீர் மூழ்கி கப்பல் மூலம் நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடும் என்று இலங்கை ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் பாதுகாப்பு வளைய பகுதியின் மிக குறுகிய...

இலங்கைத் தூதரகத்தைத் தாக்கியவர்களை ஆதாரங்கள் இருந்தும் கைது செய்யாத நோர்வே

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் மீது கடந்த 13 ஆம் திகதி புலிகள் இயக்கக் குழுவினரும் ஆதாரவாளர்களும் பெரும் தாக்குதலை மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலின் போது தூதரகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்த பொருட்கள்...

போர்ப்பிரதேசம் செல்ல ஐ.நா குழுவை அனுமதியோம்.. பான் கீ மூன் கருத்துக்கு கோத்தபாய எதிர்ப்பு

இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை தனக்கு கவலையளிப்பதாக ஐ.நா செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார் போர்ப்பகுதியில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை கண்காணிக்க ஐ.நா சபை குழுவை அனுப்பி வைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார் இந்தக்குழு...

மோதல் பகுதியிலிருந்து வெளியேறும் மக்களுக்கு எவ்வித உதவியும் தேவைப்படவில்லை -பாலித கொஹன

மோதல் பகுதியிலிருந்து வெளியேறும் பொதுமக்களுக்கு எவ்வித உதவியும் தேவைப்படவில்லை அவர்கள் தாமாகவே வெளியேறுவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன தெரிவித்துள்ளார். மோதல் பகுதியிலிருந்து மக்கள் வெளியேறும் இடங்களுக்கு ஐ.நாவின் பணியாளர்கள் செல்ல...

தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்படும்.. அரசாங்கம் தெரிவிப்பு -திவயின தகவல்

விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களான ஜோர்ஜ் மற்றும் தயாமாஸ்டர் ஆகியோருக்கு எதிராக வழக்குத்தொடரப்படும் என திவயின செய்திவெளியிட்டுள்ளது தயாமாஸ்டர் விடுதலைப் புலிகளின் ஊடகப்பேச்சாளராகவும் ஜோர்ஜ் மொழி பெயர்ப்பாளர்களாகவும் கடமையாற்றியதாக புலனாய்வுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன விடுதலைப் புலிகளுக்கு...

இலங்கை மக்களுக்கு மண் சாப்பிட நேரிட்டாலும் போர் நிறுத்தப்பட மாட்டாது -பிரதமர் தெரிவிப்பு

இலங்கை மக்கள் மண் சாப்பிடநேரிட்டாலும் விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்தப்பட மாட்டாதென பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார் சர்வதேச சமூகத்தின் ஒட்டுமொத்த உதவிகளும் நிறுத்தப்பட்டால் கூட போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என...

இலங்கையில் இருந்து அகதிகள் வருவர் என எதிர்பார்க்கிறோம் -அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர்

இலங்கையில் இருந்து மேலும் அகதிகள் வருவர் என தாம் எதிர்பார்ப்பதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பொப் டேபஸ் தெரிவித்துள்ளார் படகு ஒன்றின் மூலம் சுமார் 32 இலங்கையர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை மேற்கு அவுஸ்திரேலியாவிற்கு...

போலி அடையாள அட்டை வைத்திருந்த மட்டக்களப்பைச் சேர்ந்தவர் கைது

போலி அடையாள அட்டையுடன் காணப்பட்ட ஒருவர் செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் இவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் எனவும் இவரின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களின் தழும்புகள் காணப்பட்டதாகவும் தெரிவித்த பொலிஸார் தான் கருணா தரப்பைச்...

விடுவிக்கப்படாத பகுதிகளிலிருந்து இதுவரையில் 1லட்சத்து 75ஆயிரத்து 514பேர் வருகை

விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இதுவரை 1லட்சத்து 75ஆயிரத்து 514பேர் வந்தடைந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் கடந்த மூன்று நாட்களில் 1லட்சத்து 3ஆயிரத்து 143பேர் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்தடைந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான...

இன்று 161 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் மேல்மாகாணசபைத் தேர்தல்

இன்று மேல்மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 38அரசியல் கட்சிகளும் 23 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதில் கொழும்பு மாவட்டத்தில் 19அரசியல் கட்சிகளும், கம்பஹா மாவட்டத்தில் 11அரசியல் கட்சிகளும்,...

விடுதலைப் புலிகள் சமாதான முயற்சிகளில் அக்கறையுடன் செயற்படவில்லை -சரணடைந்துள்ள தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ்

விடுதலைப் புலிகள் சமாதான முயற்சிகளில் அக்கறையுடன் செயற்படவில்லை என்று இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் தெரிவித்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. தான் ஒரு விடுதலைப் புலி...

பிரபா தப்பிச் செல்ல மேலுமொரு நீர்மூழ்கி: சரணடையும் நிலையில் பானு உட்பட முக்கிய தலைவர்கள் – பிரபா பற்றி தயா மாஸ்டர் கூறியுள்ள முக்கிய தகவல்கள்

கேர்னல் பானு உட்பட புலிகளின் முக்கிய தலைவ ர்கள் சிலர் படையினரிடம் சரணடைய ஆயத்தமாக இருக்கின்ற போதும் பிரபாகரன், சூசை, பொட்டு அம்மான் ஆகியோரின் அழுத்தம் காரணமாக இவர்கள் சரணடையாமல் உள்ளனரென 58ஆவது படைப்பிரிவின்...

யேர்மனியில் சீனத் தூதரகம் புலி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது

இலங்கையில் உடனடி `யுத்த நிறுத்தம்` கோரி யேர்மனியில் ஆர்ப்பாட்டம் செய்த புலி ஆதரவாளர்கள் சிலர் பேர்லினில் உள்ள சீனத் தூதரகம் மீது இன்று (ஏப். 24) மதியம் தாக்குதல் நடத்தி உள்ளனர். சீன அரசுக்கு...

சுடரொளி பத்திரிகை பிரதம ஆசிரியர் வித்தியாதரன் நீதிமன்றத்தினால் விடுதலை

கொழும்பிலிருந்து தினசரி வெளியிடப்படுகின்ற சுடரொளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.வித்தியாதரன் கொழும்பு நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டார். கொழும்பில் கடைசியாக இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் விமானத்தாக்குதல் தொடர்பில் வித்தியாதரன் 26-02-2009 அன்று குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸாரால்...

சிறீலங்கா சுதந்திர கட்சியின் உபதலைவராக கருணாஅம்மான் நியமிக்கப் படவுள்ளார்..

சிறீலங்கா சுதந்திர கட்சியின் உபதலைவர் பதவிக்கு கருணாஅம்மான் நியமிக்கப்படவுள்ளார் இலங்கையின் மிகப்பலம் வாய்ந்த இரண்டு அரசியல் கட்சிகளில் ஒன்றான சிறீலங்கா சுதந்திர கட்சியின் உபதலைவர் பதவிகளில் ஒன்று கருணாவிற்கு வழங்க தீர்மானிக்கப் பட்டுள்ளது. சிறீலங்கா...