நேற்றும் இலங்கை அகதிகள் 48 பேர் தமிழகம் சென்றனர்

திருகோணமலையிலிருந்து நேற்றும் படகுகள் மூலம் 48 தமிழர்கள் அகதிகளாக இராமேஸ்வரம் சென்றுள்ளனர். இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தொடரும் யுத்த சூழ்நிலையாலும், புலிகளின் அச்சுறுத்தலாலும் அண்மைக் காலங்களில் 2576 பேர் அகதிகளாக இந்தியாவிற்குச் சென்றுள்ளனர்....

பச்சிளம் குழந்தை உள்பட 9 பேரை கொன்ற வழக்கில் 16 பேருக்கு தலா 98 ஆண்டு ஜெயில்: ஒருவருக்கு 112 ஆண்டு தண்டனை பரபரப்பான தீர்ப்பு

1 1/2 வயது குழந்தை உள்பட 9 பேரை கொலை செய்த 16 பேருக்கு 7 ஆயுள் (98 ஆண்டு சிறை) தண்டனையும், ஒருவருக்கு 8 ஆயுள் (112 வருட சிறை) தண்டனையும், மேலும்...

துபாயில் ரூ.13 கோடி கேட்டு இந்தியச்சிறுமி கடத்தல் -போலீசார் மீட்டனர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வசித்த 13 வயது இந்தியச்சிறுமி கடத்தப்பட்டாள். அவளை விடுதலை செய்ய வேண்டுமானால் 13 கோடி ரூபாய் பிணைத் தொகையாகத் தர வேண்டும் என்று கடத்தல் காரர்கள் கேட்டனர். இந்த...

சிறிலங்கா, விடுதலைப் புலிகளுக்கு இணைத் தலைமை நாடுகள் எச்சரிக்கை

இலங்கையின் நிலைமைகளை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் சர்வதேச சமூகத்தின் ஆதரவு இழக்க நேரிடும் என்று சிறிலங்கா அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் எச்சரித்துள்ளன. (more…)

கடற்தொழிலுக்கு சென்ற இருவர் சடலமாக மீட்பு

யாழ் மாவட்டம் அராலி மேற்கு கோட்டைக்காடு பகுதியில் மீனவர்கள் இருவர் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு தொழிலுக்காகச் சென்ற இவர்கள் இருவரும் நேற்று பிற்பகல் வரை வீடு திரும்பாததால் உறவினர்கள்...

வவுனியா மன்னார் வீதியில் கிளைமோர் தாக்குதல்

வவுனியா மன்னார் வீதியில் 10 ஆம் 11ஆம் மைல் கல்லுக்கிடைப்பட்ட பகுதியில் நேற்று (30.05.2006) காலை 7.00 மணியளவில் புலிகளினால் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட கிளேமோர் தாக்குலில் இரண்டு பொலிஸார் காயமடைந்துள்ளனர். (more…)

கிழக்கில் 13 சிங்களவர்கள் சுட்டுக்கொலை

கிழக்கு மாகாணத்தில் 13 சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சிறீலங்கா இராணுவம் தெரிவி;த்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கட்டடத் தொழி லாளர்களெனத் தெரியவருகிறது. நேற்றுத் தி;ங்கட்கிழமை 15 கட்டடத்தொழிலாளர்கள் கடத்திச் செல்லப்பட்டு அவர்களில் 13பேர் படுகொலை...

ஓமடியாமடுவில் 13பேர் சுட்டுக்கொலை

பொலநறுவை வெலிகந்தை ஓமடியாமடு ரண்சரத்தனை பகுதியில் கால்வாய் அகழ்வில் ஈடுபட்டிருந்த 13பெரும்பான்மை இனத்தவர் நேற்று புலிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். (more…)

வட்டுக்கோட்டையில் இருவர் சுட்டுக்கொலை

வட்டுக்கோட்டை மூளாய் வீதியில் மாவடிக்கு சமீபமாக தொலைத்தொடர்பகம் ஒன்றிற்குள் நேற்று (28.05.2006) பிற்பகல் 5.00 மணியளவில் உள்நுழைந்த ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானார் மற்றொருவர் படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்தார். (more…)

நாவாந்துறையில் முன்னாள் மாநகரசபை ஈபிடிபி உறுப்பினர் புலிகளால் சுட்டுக்கொலை

யாழ்ப்பாணம் நாவாந்துறை கடற்கரை வீதியில் வசித்துவரும் மைக்கேல் யேசுதாசன் (வயது 70) என்பவர் இன்று (29.05.2006) நண்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் ஈ.பி.டி.பி சார்பில் போட்டியிட்டு தெரிவான முன்னாள் மாநகரசபை உறுப்பினரும், கடந்த 30.03.2006 இல்...

வேலியே பயிரைமேயும் சூட்சுமம் இதுதான்

விடுதலைப்புலிகள் சிறுவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதை அவர்கள் மறுதலித்தே வந்துள்ளனர். இப்படத்தில் கைகட்டி நிற்பவர் புலிகளின் சிறுவர்பாதுகாப்பு அணிக்கு பொறுப்பான தியாகராஜா. மற்றும் சிறுவர்களுக்கு ஆயுதத்தை கொடுக்கும் புலிப்போராளி. ய10னிசெப் அமைப்பிற்கு சிறுவர்களை நாம் படைகளில்...

விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் பகிரங்கமாக அறிவித்துள்ளது

விடுதலைப்புலிகள் அமைப்பை 29.05.06 அன்று ஐரோப்பிய ய10னியன் பயங்கரவாத இயக்கமாக அறிவித்து தடைசெய்திருக்கிறது. 25நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ய10னியனின் அமைச்சரவை நேற்று புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருப்பதை செய்திஸ்தாபனங்கள் அனைத்தும் இன்று...

கேள்விமேல் கேள்வி கேட்டு கருணாநிதியை திணறடித்தார் ஜெயலலிதா, ஜான்சி ராணியை போல் துணிச்சல் மிக்கவர் வைகோ பாராட்டு

சட்டசபையில் ஜெயலலிதா தனியாக சென்று வாதாடி ஜான்சிராணியின் துணிச்சலை வெளிப்படுத்தினார் என்று வைகோ பாராட்டினார். தேவைப்படும் நேரத்தில் சட்டசபைக்கு வருவேன், கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்று ஜெயலலிதா அறிவித்து இருந்தார். அதன்படி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்...

இந்தோனேஷியா பூகம்பத்தில் கண்ணீர் காட்சிகள் ஒரு நகரில் மட்டும், 2,400 பேர் பலியான பரிதாபம்

இந்தோனேஷியாவை தாக்கிய பூகம்பத்தில் பண்டுல் நகரில் மட்டும் 80 சதவீதம் வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி 2,400 பேர் பலியானார்கள். இந்தோனேஷியாவின் ஜாவா தீவு பகுதியை நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர...

எவரெஸ்ட் சிகரம் ஏறியவர் சீனாவில் இருந்து வெளியேற்றப்பட்டார

எவரெஸ்ட் சிகரத்தின் மீது வெற்றிகரமாக ஏறிய இத்தாலிய வீரர் சிமோன் மோரோ. இவர் நேபாளம் வழியாக மலை ஏறிவிட்டு சீனா வழியாக இறங்கினார். இமயமலையின் வடக்குப் பகுதியில் உள்ள சீன எல்லையில் உள்ள மலை...

வலிகாமம் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி மற்றையவர் காயம்

யாழ். வலிகாமம் வட்டுக்கோட்டையில் நேற்றுமாலை 4.30மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் வட்டுக்கோட்டை மூளாய்வீதியில் உள்ள தொலைத்தொடர்பு நிலைய உரிமையாளரான 26வயதுடைய பூர்ணம் சபேசன் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். இவரது நண்பரான 26வயதுடைய திகிலராஜா துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து ஆபத்தான...

ஒஸ்லோ கூட்டத்தில் புலிகள் பங்கேற்பர்

எதிர்வரும் 8ம் 9ம் திகதிகளில் ஒஸ்லோவில் நடைபெறவுள்ள யுத்தநிறுத்தக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் நோட்டிக் நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு புலிகள் இணங்கியுள்ளனர். நோர்வே விடுத்த அழைப்பை புலிகளின் தலைமைப்பீடம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதற்காக தமது து}துக்குழு...

யாழ்.நாவாந்துறையில் ஈ.பி.டி.பியைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை

யாழ். நாவாந்துறைப் பகுதியில் ஈ.பி.டி.பி aைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சென் அன்ரனீஸ் தேவாலயத்திற்கு முன்பாக வைத்து இன்று திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் அவர் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் போது அதே...

திருமலை அரச அதிபராக இராணுவ அதிகாரி நியமனம்: புலிகள் எதிர்ப்பு

திருகோணமலை அரச அதிபராக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வாவை நியமித்துள்ளமைக்கு விடுதலைப் புலிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.இத்தகைய நியமனம் மூலம் குடிசார் நிர்வாகத்தை சிறிலங்கா அரசாங்கம் இராணுவமயமாக்குகிறது என்று திருமலை மாவட்ட...

வில்பத்து விலங்குகள் சரணாலயத்தில் உல்லாசப்பயணம் மேற்கொண்டவர்கள் நிலக்கண்ணியில் சிக்கி மரணம்

வில்பத்து சராணாலயத்தில் உல்லாசப்பிரயாணிகளாகச் சென்றவர்கள் (27.05.06) மர்மமான முறையில் நிலக்கண்ணி வெடிவிபத்தில் சிக்கி மரணமாகியுள்ளார்கள். இச்சம்பவத்தில் 7 பேர் பலியானதாகத்தெரிவிக்கப்படுகிறது. இதில் 2 பேருடைய சடலங்கள் உடற்பாகமற்ற இருவரின் தலைகளும் உருக்குலைந்த நிலையில் கண்டுபிடிக்கபட்டதாகத்...

உரிமைகுரல் எழுச்சிப் பேரணி தொடர்பாக… புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு

எதிர்வரும் திங்கள்கிழமை பல ஐரோப்பிய நாடுகளிலும் கனடா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் படுகொலை புலிகளால் உரிமைகுரல் எழுச்சி பேரணி நிகழ்வுகளை நடத்தவுள்ளார்கள். இதில் பலகோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். இதற்கு முன்பும் பலபேரணிகளை நடத்தியுள்ளார்கள்;.அமைதிபேரணி சமாதானபேரணி பொங்குதமிழ்...

புலிகளின் பயிற்சி முகாமிலிருந்து தப்பிய சிறுவர்கள் இராணுவ முகாமில் தஞ்சம

புலிகளால் பலவந்தமாக கட்டாயப் பயிற்சிக்காக கடத்திச் செல்லப்பட்ட மூன்று பாடசாலை மாணவர்கள் நேற்றுமாலை புலிகளிடம் இருந்து தப்பி வந்து மூது}ரிலுள்ள இராணுவ முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர். திருகோணமலையைச் சேர்ந்த இருதயா அமலதாஸ்சங்கர் (வயது 19),...

இந்தியப் புடவை வியாபாரிகள் மீண்டும் கடத்தல் அச்சத்தால் இந்தியப் புடவை வியாபாரிகள் பலரும் இலங்கையை விட்டு வெளியேறுகின்றனர்

இந்தியப் புடவை வியாபாரிகள் மீண்டும் கடத்தல் அச்சத்தால் இந்தியப் புடவை வியாபாரிகள் பலரும் இலங்கையை விட்டு வெளியேறுகின்றனர் - மட்டக்களப்பில் இரண்டு இந்திய புடவை வியாபாரிகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். 43வயதுடைய ராதாகிருஷ்ணன், 33வயதுடைய அன்டன்...

நீர்ப்பாசன, விவசாய பிரதிப் பணிப்பாளர் சுட்டுக்கொலை

நீர்ப்பாசன, விவசாய பிரதிப் பணிப்பாளர் சுட்டுக்கொலை- மட்டக்களப்பு கள்ளியங்காட்டுப் பகுதியில் வடக்குக்கிழக்கு நீர்ப்பாசன மற்றும் விவசாய அபிவிருத்தி திட்ட மாகாண பிரதிப் பணிப்பாளரான நற்பிட்டி முனையைச் சேர்ந்த ரட்ணம் ரட்ணராஜா நேற்று பிற்பகல் 2.15மணியளவில்...

கருணா தரப்பு ஆயுதங்களைக் களைய வேண்டிய அவசியம் எமக்கில்லை – வெளிவிவகார அமைச்சர்

புலிகள் தமிழ்மக்களின் உரிமைக்காக போராடவில்லை. தங்களின் இருப்பை காப்பாற்றுவதற்காகவே போராடுகின்றனர். என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று சபையில் தெரிவித்துள்ளார். கருணா குழுவுக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை. (more…)

இந்தோனேசியாவில் பாரிய பூகம்பம்

இந்தோனேசியாவின் யாவா தீவில் இன்று அதிகாலை இடம்பெற்ற 6.2 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறைந்தபட்சம் 1325பேர் உயிரிழந்திருப்பதாகவும், நு}ற்றுக்கணக்கானோர் காயமடைந்திருப்பதாகவும் இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது. (more…)

மட்டக்களப்பில் இராணுவத்தினரின் கழிவு அகற்றும் பவுசர் மீது கிளைமோர் தாக்குதல்

மட்டக்ளப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு திருமலை வீதியில் ஊரணி என்ற இடத்தில் நேற்று (26.05.2006) நண்பகல் இராணுவத்தினரின் கழிவு அகற்றும் பவுசர் மீது கிளைமோர் தாக்குதல் நடாத்தப்பட்டது. பவுசர் சிறிது சேதத்திற்குள்ளான பேதும் பவுசரில் சென்ற...

ஊர்காவற்றுறையில் துப்பாக்கிச் சூடு: ஈ.பி.டி.பி. உறுப்பினர் காயம்

யாழ். தீவகம் ஊர்காவற்றுறை புளியங்கூடல் இந்தன் பிள்ளையார் கோயிலடியில் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியவில் இடம்பெற்றுள்ளது. (more…)

யாழில் த.தே.கூ.. வேட்பாளர் உட்பட இருவர் சுட்டுக்கொலை

யாழ். அச்சுவேலியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபை வேட்பாளர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். (more…)

கைது செய்யப்பட்ட அகதிகள்

தமிழகத்திற்கு அகதிகளாக செல்லவிருந்தபோது தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த புதன்கிழமை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட திருமலையைச் சேர்ந்த 115பேர் நேற்றுபிற்பகல் தலைமன்னார் பங்குத்தந்தை அன்டனிதாஸ் வலிமாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது புனித லோரன்ஸ்சியா ஆலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களையம்...

நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதியுடன் நீண்ட பேச்சுவார்த்தை

இலங்கைக்கு விஜயம் செய்த நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெம் இன்று (26.05.2006) முற்பகல் அலரிமாளிகையி;ல் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார். சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராயப்பட்ட இந்த...

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு

கிண்ணியா மஹ்ரூப் நகரில் கடந்த சனிக்கிழமை காணாமல் போயிருந்த சிறுமி சுமையா பானு மஹமட்லாபீர் (9வயது) புதைகுழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். (more…)

வெடிவிபத்தில் லெப். கேணல் வீரமணி வீரச்சாவு

யாழ். மாவட்டம் குடாரப்புப் பகுதியில் புதன்கிழமை இடம்பெற்ற வெடி விபத்தில் லெப்.கேணல் வீரமணி வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். லெப்.கேணல் வீரமணி என்றழைக்கப்படும் வவுனியா பாவற்குளம் முதலாம் யூனிற்றை சொந்த முகவரியாகவும், கிளிநொச்சி தொண்டமான்...

பருத்தித்துறையில் இரு இளைஞர்கள் கைது.

யாழ். வடமராட்சி பருத்தித்துறை புறாப்பொறுக்கிச் சந்தியில் இளைஞர்கள் இருவர் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

மட்டக்களப்பில் இலங்கை காவல்த்துறையினர் ஒருவர் சுட்டுக் கொலை.

நேற்று மாலை 3 மணியளவில் கல்லடி பிள்ளையார் கோவில் அருகில் உள்ள மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகில் காவற்துறையில் பணியாற்றி வரும் தமிழரான ஆரோக்கியம் பிரசன்னா (வயது 28) என்பவர் அவ்விடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த புலிகளின்...

திருமலையில் ஊர்காவல் படை வீரர் சுட்டுக்கொலை

திருணோமலை பாலையூற்றில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களினால் சிறிலங்கா ஊர்காவல் படை வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. (more…)

கொக்குவிலில் கிளைமோர்த் தாக்குதல்: 2 இராணுவத்தினர் காயம்- பொதுமகன் பலி

யாழ். கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் இருவர் படுகாயமடைந்தனர். பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டார். (more…)

மன்னாரில் கிளைமோர்த் தாக்குதல்: போராளி பலி- பொதுமகன் காயம்

விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான மன்னார் மடுப்பகுதியில் சிறிலங்காப் படையின் ஆழ ஊடுருவும் படையணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் போராளி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். (more…)